.

Pages

Sunday, June 28, 2015

சீனாவில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற அதிரையின் முதல் மாணவர் !

அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்தவர் வாவன்னா அஹமது மஹ்சின். இவரது மகன் முஹம்மது காமில். அதிரையின் முதல் மாணவராக சீனா டேலியன் பல்கலைகழகத்தில் 6- 1/2 ஆண்டுகள் மருத்துவ கல்வி பயின்று பட்டம் பெற்றுள்ளார்.

சீனாவில், எம்பிபிஎஸ் படித்து வெளிவரும் மாணவர்கள், இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள, இந்தியன் மெடிக்கல் கவுன்சிலின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஸ்கிரீனிங் தேர்வு எழுத வேண்டும்.

இதுகுறித்து மருத்துவர் 'முஹம்மது காமில்' நம்மிடம் கூறுகையில்...
'சிறுவயது முதல் நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தேன். எனது ஆர்வத்திற்கு எனது பெற்றோர்கள் - சகோதரர்கள் மிகுந்த ஒத்துழைப்பை எனக்கு வழங்கினார்கள். இவை மருத்துவம் படிக்க மிகவும் உதவியாக இருந்தது. இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க விரும்பும் நாடுகளில் சீனாவும் ஒன்று. கடந்த 6 - 1/2 ஆண்டுகளாக சீனாவில் உள்ள டேலியன் மாகாணத்தில் தங்கி மருத்துவ கல்வி பயின்று வந்தேன். நேற்று [ 28-06-2015 ] பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மருத்துவத்திற்கான பட்டம் பெற்றேன். எனது மருத்துவ சேவையை எனது பிறந்த ஊரிலிருந்து துவங்க திட்டமிட்டுள்ளேன். இதற்கான பயிற்சியை நமதூர் மருத்துவர் ஹெச். அப்துல் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டுதல் படி மேற்கொள்ள இருக்கிறேன்' என்றார்.
 

17 comments:

  1. masha allah mabrook .ivarudaya seavai namathur makkaluku payanpadattum insha allah kamilin yethikalam seavai yai maiyapaduthi iruka vendum.

    ReplyDelete
  2. Masha Allah .. Vungal pani sirakka vazhulthukkal

    ReplyDelete
  3. masha allah mabrook .ivarudaya seavai namathur makkaluku payanpadattum insha allah kamilin yethikalam seavai yai maiyapaduthi iruka vendum.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ..
    தங்களின் சேவை ...தொடர வாழ்த்துகள் ..
    தங்கள் குடும்பத்தின் சந்தோசத்தில் நானும் ஒருவனாய் மகிழ்கிறேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அல்லஹ் அவர்கள் என்னதை நிறைவேற்றி தருவனக

    ReplyDelete
  6. அல்லஹ் அவர்கள் என்னதை நிறைவேற்றி தருவனக

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ் மஃப்ரூக் டாகடர் பட்டம் பெற்ற சகோதரர் காமிளுடைய சேவைகள் தொடரட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.