திறப்பு விழாவினையொட்டி தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
விலையில்லா அரிசி, கறவை மாடுகள், ஆடுகள், விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, பள்ளி மாணவ மாணவர்களுக்கு மடிக்கணினி, 14 வகையான கல்வி உபகரணங்கள், விலையில்லா மிதிவண்டிகள், மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பயனாளிகளுக்கு வழங்கிய விபரங்களை விளக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன் (தஞ்சாவூர்), சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), திரு.எம்.ரெத்தினசாமி (திருவையாறு), திரு.இரா.துரைக்கண்ணு (பாபநாசம்), மாண்புமிகு மாநகர மேயர் திரு.சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் திரு.ஆர்.காந்தி, மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் ஆர்வத்துடன் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.