.

Pages

Monday, June 8, 2015

அதிரை ரெட் கிராஸ் சேர்மன் பொறுப்புக்கு 'மரைக்கா' இத்ரீஸ் நியமனம் !

தஞ்சை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இரத்த வங்கி, உயிருக்கு போராடும் நபர்களுக்கு இரத்தம் வழங்குதல், இரத்த வகை கண்டறிதல், பேரிடர் மேலாண்மை திறன் குறித்த மேம்பாடு பயிற்சி முகாம் மற்றும் செயல் விளக்கம், இலவச பொதுநல மருத்துவ முகாம், அவசரகால முதலுதவி மற்றும் வரும் முன் காப்போம் பயிற்சி முகாம் குறிப்பாக முதலுதவி செயல்முறை மற்றும் பயிற்சி மற்றும் மயக்கம், தீ விபத்து, எலும்பு முறிவு, நீரில் மூழ்கியவர்கள் மற்றும் வலிப்பு நோய் குறித்தும், அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் கிளையை அதிரையில் துவங்குவதற்கான தீவிர ஆலோசனையில் அதிரையை சேர்ந்த தன்னார்வலர்கள் இறங்கினர். தொடர்ந்து இதற்கான புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளில் மரைக்கா இத்ரீஸ் தீவிரமாக ஈடுபட்டார். இவருடைய ஆர்வத்துக்கு தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் முனைவர் திருமதி வசந்தா அவர்கள் பக்கபலமாக இருந்து வந்தார். இதையடுத்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதன் பின்னர் தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டியின் அதிரை கிளை துவங்கப்பட்டது. இதில் 8 பேர் நிர்வாக பொறுப்புக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இதில் அதிரை ரெட் கிராஸ் சேர்மனாக மரைக்கா இத்ரீஸ், துணை சேர்மனாக இர்ஃபான் சேக், செயலாளராக நிஜாமுதீன், துணை செயலாளராக அபூதாஹிர், பொருளாளராக ஹாஜி எஸ் ஏ அப்துல் ஹமீது, நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக சார்லஸ், ஆறுமுகச்சாமி, எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதற்கான அனுமதி கடிதத்தை தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் முனைவர் திருமதி வசந்தா அவர்கள், ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரிஸிடம் வழங்கினார். அப்போது ரெட் கிராஸ் துணை செயலாளர் அபூதாகிர், ரெட் கிராஸ் ஆயுட்கால உறுப்பினர் L.V.S அஹமது கபீர், M. அஹமது அனஸ், A. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர்.

ரெட் கிராஸ் சொசைட்டி புதிய கிளை அதிரையில் துவக்கம் தொடர்பாக தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

7 comments:

  1. அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தன் அமைப்பில் சேர்த்து ,ரத்ததான முகாம் நடத்தி அதிக யூனிட் ரத்தம் சேர்த்து விருதுகள் வாங்க அதிரை ரெட் கிராஸ் சேர்மனை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    இன்ஷா அல்லாஹ், தம்பி இத்ரீஸ் அவர்களின் களப்பணி தொடரட்டும்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  3. ரெட்கிராஸ் அதிரைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இதனை மிகவும் திறம்பட செயல்படுத்த வேண்டும் என மரைக்கா இத்ரீஸை வாழ்த்துகிறேன்.

    அதேபோல அதிரையில் அதிகமான வகையில் அவ்வப்போது மருத்துவ விழிப்புணர்வுகள் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக விபத்து விழிப்புணர்வு, திடீரென தோன்று புதிய வகையான வியாதிகள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை நடத்தில் அதனிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பனவற்றை அதிரைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள சேர்மன் மரைக்கா இத்ரீஸ் துரிதமாகவும், உத்வேகத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. தான் பொருப்பேற்றிருக்கும் சேர்மன் பதவியை அதை வழங்கிய இறைவவனுக்கு அஞ்சி அனைத்து சமூக மக்களுடன் இனக்கத்தோடு தன் களப்பனியை திறம்பட செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொன்டவனாய் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. தம்பி இத்ரீஸ் அவர்களின் களப்பணி மிக உத்வேகத்துடன் செயல்பட் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.

    இன்ஷா அல்லாஹ், தம்பி இத்ரீஸ் அவர்களின் களப்பணி தொடரட்டும்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.