.

Pages

Friday, June 19, 2015

இளைஞர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் !

நாட்டின் பொருளாதார வளர்ச்சி காரணமாக பெரிய மற்றும் சிறிய நகரங்களின் வளர்ச்சியானது வியக்கத்தக்க அளவில் விரிவடைந்து கொண்டே வருகிறது. இதன் விளைவாக உயர்ந்து வரும் அடுக்குமாடி கட்டிடங்கள், பிரமாண்ட வணிக வளாகங்கள், தனிக் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் என பல்வகையில் நகரங்கள் விரிவடைந்து கொண்டே வருகிறது. ஆனால் இவ்வளர்ச்சிக்கு ஏற்ப பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பயிற்சி பெற்றவர்கள் மிக குறைவான அளவில் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் அங்கமான தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இளைஞர்கள், தனியார்த்துறையில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் பாதுகாப்பு சேவைப் பணிகள் குறித்து 21 நாள்  திறன் எய்தும் பயிற்சியினை 29.06.2015 முதல் தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து வழங்க உள்ளது.

இத்திறன் எய்தும் பயிற்சி முழுக்க முழுக்க இலவசமாகும். பயிற்சி நேரம் தினசரி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் திருப்திகரமாக பயிற்சியினை நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு தினமும் தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.  இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.  வயது வரம்பு 18 முதல் 45 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

பயிற்சி தஞ்சாவூர் மாவட்ட தலைநகரத்தில் உள்ள காவல்துறை பயிற்சி மைதானத்தில் வழங்கப்படும்.  இப்பயிற்சியில் 250 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 23.06.2015 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தங்களது அசல் கல்விச் சான்று, சாதிச்சான்று இருப்பிட முகவரிக்கான சான்றாக குடும்ப அடையாள அட்டையின் அசல் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங் ( Passport Size ) களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று முன் பதிவு செய்து கொள்ளலாம்.
 
தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.  அப்பயிற்சியின் முடிவில் தனியார் துறை பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் பணியில் சேருவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.