.

Pages

Friday, June 19, 2015

குளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம் !

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் விட்டுவிட்டு பெய்த சாரல்மழையின் காரணமாக பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம்,தென்காசி பகுதியில் புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து சாரல்மழை பெய்தவாறு இருந்தது.வியாழக்கிழமை காலையில் சுமார் இரண்டுமணிநேரம் பெய்த தொடர்மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

பிற்பகலில் பேரருவி, ஐந்தருவியில் செம்மண் நிறத்துடன் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் அருவியில் சிறிய அளவிலான கற்களும் கீழே விழுந்தது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பேரருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுகிறது. ஆனாலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்த அளவில் இருந்ததால் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் சிற்றருவி, பழைய குற்றாலம், புலியருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. குற்றாலத்தில் சீசன் தொடங்கியதையடுத்து சுற்றுலாப் பயணிகளும், வர்த்தகர்களும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
நன்றி:தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.