.

Pages

Thursday, June 4, 2015

தஞ்சையில் IAS / IPS தேர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி !

அரசு  பணிகளில்  மிக  உயர்ந்த  பணியாகவும்  மதிப்புமிக்க  பணியாகவும் கருதப்படும் IAS / IPS பணிகளை உள்ளடக்கிய இந்திய குடிமைப்பணிகள் தேர்வு தொடர்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 19.06.2015 ஆகும்.  கல்வித்தகுதி ஏதேனும் ஒரு  பட்டப்படிப்பு  01.08.2015  அன்றைய நிலையில்  வயது வரம்பு 21  முதல்  32 வரை. அனைத்து வகுப்பினருக்கும் 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு   5   ஆண்டுகள்   வயது   சலுகை   அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள்  http://www.upsconline.nic.in/ என்ற  இணைய  தளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

இத்தேர்வினை எழுத  இருக்கும்  தஞ்சாவூர்  மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களுக்கு இத்தேர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 07.06.2015 அன்று காலை 10 மணி அளவில்  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இவ்விழிப்புணர்வு  நிகழ்ச்சியில் தஞ்சாவூர்  மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்  IAS / IPS  தேர்வு தொடர்பான  தேர்வுத்திட்டம், பாடத்திட்டம், விருப்ப பாடம் தேர்வு செய்தல், பாட குறிப்புகள் தயாரித்தல் நேர்முக தேர்வினை எதிர்கொள்ளுதல் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க உள்ளார்கள்.

மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி II-ல் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத்தேர்வு 26.07.2015-ல் நடைபெற உள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பத்த மாணவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக இலவச பயிற்சி வகுப்பும்

07.06.2015 முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களில் மட்டும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும்.

IAS மற்றும்   TNPSC GROUP-II தேர்வுக்கு  விண்ணப்பித்து  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் addeotnj@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 IAS  தேர்விற்கு விண்ணப்பித்தவர்களும் TNPSC GROUP-II எழுத உள்ள மாணவர்களும் 07.06.2015 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.