அதிரை அடுத்துள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் வாலிபர் ஒருவர் சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிரை ஏரிப்புறக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பிராபாகரன். இவருக்கும் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு மலையாகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி மகள் மாரியாயி என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் 6 வயதில் சுதாகர், சுரேஷ் ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். அன்றைய முதல் பிரபாகரன் மாமனார் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பாத பிராபாகரன், நேற்று காலை அதே பகுதியில் உள்ள சுடுக்காட்டில் தூக்கில் தொங்கினார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், சப்-இன்ஸ்பெக்டர் நதியா அ10கியோர் சென்று தூக்கில் தொங்கிய பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பிராபகரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா ? என்ற கோணத்தில் முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.
செய்தி மற்றும் படம்:
நிருபர் மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
அதிரை ஏரிப்புறக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பிராபாகரன். இவருக்கும் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு மலையாகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி மகள் மாரியாயி என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் 6 வயதில் சுதாகர், சுரேஷ் ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். அன்றைய முதல் பிரபாகரன் மாமனார் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பாத பிராபாகரன், நேற்று காலை அதே பகுதியில் உள்ள சுடுக்காட்டில் தூக்கில் தொங்கினார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், சப்-இன்ஸ்பெக்டர் நதியா அ10கியோர் சென்று தூக்கில் தொங்கிய பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பிராபகரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா ? என்ற கோணத்தில் முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.
செய்தி மற்றும் படம்:
நிருபர் மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.