.

Pages

Sunday, April 10, 2016

திமுக தேர்தல் அறிக்கை 2016 - முக்கிய அம்சங்கள்!

2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து திமுக தலைவர் கருணாநிதி ஞாயிறன்று 72 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் மதுவிலக்குச் சட்டம் நடைமுறைப்படுத்தும் என்பதை முதலில் அறிவித்தார்.

பிறகு விவசாயத்துக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, துரைமுருகன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மதுவிலக்கை அமல்படுத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்,.

மதுவிற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்.

மதுவிலக்கு இழப்பை ஈடுகட்ட உரிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு.

மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு.

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் சிறு, குறு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

ஏரிகளைத் தூர்வார ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வெள்ளத்தினால் ஏற்படும் சேதத்தை தடுக்க ரூ.5,000 கோடி.

அனைத்து ரக விதை நெல்லுக்கும் முழு மானியம்.

மகளிருக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு அளிக்கப்படும்.

கல்விக் கடன் தள்ளுபடி

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும்.

மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியருக்குக் ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்.

ஆட்டோ வாங்குவதற்கு அரசு ரூ.10,000 மானியம் வழங்கும்.

முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.

பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

நெசவாளர் வீடுகட்ட ரூ.3 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

முதியோருக்குக் கட்டணமில்லா பயணச் சலுகை.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.

விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

நெல்கொள்முதலுக்கு ஆதார விலை ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு ரூ.2,500 வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தந்தை பெரியார் பிறந்தநாள் பகுத்தறிவு தினமாக கொண்டாடப்படும்.

பட்டாதாரிகள் சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும்.

அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைக்கப்படும்.

ஏழை மக்கள் வசதிக்காக அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு போன்ற குடும்ப அட்டை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

மதுரை முதல் தூத்துகுடி வரை தொழிற்சாலைகள் நிரம்பிய நெடுஞ்சாலை.

மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை.

அனைத்து மாணவர்களுக்கும் 3ஜி/4ஜி இணையதள வசதி செய்து தரப்படும்.

மீனவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும்.

தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும்.

சென்னையை அடுத்த வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.

நியாயமான விலையில் மணல் விற்பனை செய்யப்படும்.

அரசுப்பள்ளிகளில் உள்ள 54,233 வேலைக்காலியிடங்கள் நிரப்பப்படும்.

வசதியில்லாதவர்களுக்கு சலுகை விலையில் கைபேசி வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.

ஊரக வேலைவாய்ப்புக் கூலி ரூ.100லிருந்து ரூ.150ஆக அதிகரிக்கப்படும்.

தொடக்கப்பள்ளி சத்துணவில் பால் சேர்க்கப்படும்.

பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.

பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.//

    சபாஸ்: கோவையில் சிறையில் வாடும் இஸ்லாிய அப்பாவிகளை கவன்த்தில் கொண்டு அறிக்கை இல்லை.

    இஸ்லாமியர்களுக்கு இட ஒதிக்கீட்டைப் பற்றி அறிக்கை இல்லை.

    உறங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதரனே இன்னு எவ்வளவு காலம் உறங்கிக் கொண்டிருப்பாய் விழுத்தெழு.

    இஸ்லாமியர்களின் பாதுகவலர் நாங்கள் தான் என்று அடிக்கடி சொல்வதின் அர்த்தம் என்னவென்று இப்ப புரிகிறதா?

    ReplyDelete
  4. இஸ்லாமியர்களின் பாதுகாவலர் கட்சி என்று தம்பட்டம் அடிக்கும் திமுக வின் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி எந்த ஒரு மூச்சுப் பேச்சும் இல்லை...

    ஏமாந்தது போதும், இனியாவது திருந்தட்டும் நம் மக்கள்..

    ReplyDelete
  5. திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள இயக்கங்களும் , இடஒதுக்கீடு , திருமணப்பதிவு & சிறைவாசிகளைப் பற்றி நிபந்தனை விதித்து கூட்டணி அமைத்தார்களா என்பதும் தெரியவில்லை. அவருக்கு முந்தி இவர் ஓடுவதும் இவருக்கு முந்தி அவர் ஒடுவதும்தான் நடந்தது. தேர்தல் அறிக்கையைப் பார்த்துவிட்டு கூட்டணிகளை முடிவு செய்தாலே விடிவு சாத்தியம்.

    ReplyDelete
  6. உண்மையில் எனக்கு மலைப்பாக த்தான் இருக்கிறது , கருணாநிதியின் அறிக்கை. அவர் ஒரு ஆழமான அரசியல்வாதி என்பதையும், அரசியல் வெறி அவருக்குள் கனன்று கொண்டிருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது... நான் தி முக அல்ல. அதற்காக இந்த முதிர்ந்த அரசியல் ஞானத்தை தள்ள முடியவில்லை. பலரும் பல விதமாக கூட்டணி பற்றி குமுறி கொண்டிருக்க யதார்த்தத்தை , யதார்த்தமாக ஏற்று கொண்டு அட , விடு ,போ போ மேலே மேலே போய்கொண்டே இரு என்று தன போக்கில் அவர் கட்சியை Push பண்ணி கொண்டே போவது அதுவும் 92 ல் நிச்சயமாக என் மனதை மிகவும் கவர்ந்து விட்டது.

    இலவசங்கள் பற்றி எதுவும் இல்லை ஆட்டோ வாங்க மானியம் 10,000/- நீர் ஆதாரத்தையும், விவசாயிகளையும் கைவிடவில்லை 3.5 லட்ச பேருக்கு வேலையாம்; மது இல்லாத தமிழகமாம் .வெற்றிக்கு வழிவகுக்கும் தேர்தல் அறிக்கை. சபாஷ் தலைவரே!

    ReplyDelete
  7. பேங்க் நகை கடன் திருப்பித்தருவிங்கலா?

    ReplyDelete
  8. மது புகைப்பிடித்தல் அடியோடு நிருத்தி நம் சமுதாய மக்களை காப்பாற்றுவிங்கலா .இந்த இரண்டினான் பாதிக்கப்பட்டவர்கலை காப்பாட்த்துவிங்கலா

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.