தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம் தலைமை வகித்தார். தமாகாவின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன், அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் D. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்த தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே வாசனுக்கு நன்றி தெரிவித்து தீர்மானிக்கப்பட்டது. மேலும் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்ட முடிவில் சமீபத்தில் மறைந்த கட்சியின் அதிரை பேரூர் முன்னாள் துணை தலைவர் தண்டாயுதபாணி செட்டியார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் M.M.S ஜலீல், ஆர். ராமானுஜம், ஏ. கண்ணன், வி.வீரப்பன், ராஜேந்திரன், எம். காதர் அலி, புகாரி, சகாதேவன், நாகரெத்தினம் உள்ளிட்ட அதிரை பேரூர் தமாகாவினர் பலர் கலந்துகொண்டார்கள்.
காங்கிரஸ் ஒன்றாக இருந்தபோது பட்டுக்கோட்டைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற திரு ரங்கராஜத்தேவர், அடுத்த தேர்தல் வந்தபோது, "எனக்கு இன்னும் ஒரே ஒரு ச்சான்ஸ் கொடுங்கள் போதும்" என்று கூறி, அந்தத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.
ReplyDeleteஇப்போது தமிழ்நாடு காங்கிரஸ் உடைபட்டுத் 'தமிழ் மாநில காங்கிரஸ்' ஆக G.K. வாசன் தலைமையில் பிளவு பட்டபோது, மீண்டும் ரங்கராஜன்! உடை பட்டதால் அடித்ததய்யா ச்சான்ஸ்!