.

Pages

Sunday, April 10, 2016

அதிரையில் நடந்த தமாகா ஆலோசனைக் கூட்டத்தில் ஜி.கே வாசனுக்கு நன்றி தெரிவிப்பு !

அதிராம்பட்டினம் ஏப்-10
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம் தலைமை வகித்தார். தமாகாவின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன், அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் D. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்த தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே வாசனுக்கு நன்றி தெரிவித்து தீர்மானிக்கப்பட்டது. மேலும் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்ட முடிவில் சமீபத்தில் மறைந்த கட்சியின் அதிரை பேரூர் முன்னாள் துணை தலைவர் தண்டாயுதபாணி செட்டியார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் M.M.S ஜலீல், ஆர். ராமானுஜம், ஏ. கண்ணன், வி.வீரப்பன், ராஜேந்திரன், எம். காதர் அலி, புகாரி, சகாதேவன், நாகரெத்தினம் உள்ளிட்ட அதிரை பேரூர் தமாகாவினர் பலர் கலந்துகொண்டார்கள்.

1 comment:

  1. காங்கிரஸ் ஒன்றாக இருந்தபோது பட்டுக்கோட்டைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற திரு ரங்கராஜத்தேவர், அடுத்த தேர்தல் வந்தபோது, "எனக்கு இன்னும் ஒரே ஒரு ச்சான்ஸ் கொடுங்கள் போதும்" என்று கூறி, அந்தத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.

    இப்போது தமிழ்நாடு காங்கிரஸ் உடைபட்டுத் 'தமிழ் மாநில காங்கிரஸ்' ஆக G.K. வாசன் தலைமையில் பிளவு பட்டபோது, மீண்டும் ரங்கராஜன்! உடை பட்டதால் அடித்ததய்யா ச்சான்ஸ்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.