.

Pages

Thursday, April 7, 2016

திமுக கூட்டணியில் பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கா ?

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தெந்த தொகுதி என்பது குறித்து இன்னமும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றிவருவதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, காங்கிரஸ் போட்டியிட உள்ள 23 உத்தேச தொகுதிகளின் பெயர்கள் வெளியாகியுள்ளன.  அதில், பட்டுக்கோட்டை, ராயபுரம், மயிலாப்பூர், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, ஆம்பூர், கலசப்பாக்கம், செய்யாறு, ஆத்தூர், ஓசூர், தாராபுரம், காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம், காரைக்குடி, கோபி, சிவகங்கை, ஸ்ரீவைகுண்டம், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், நாங்குநேரி, கடலூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.

நன்றி: நியூஸ் 7 தமிழ் 

1 comment:

  1. தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் கூட்டணி குறித்து முடிவுகள் முடித்து தொகுதி பங்கீடு என்ற நிலைக்கு போய் விட்டனர். ஆனால் தமாகா., இன்னும் எந்த அணியில் சேர்வது என்பது குறித்து முடிவு எடுக்க முடியாமல் குழம்பி வருகிறது. அதிமுக அழைக்கும், திமுக. அழைக்கும் என காத்திருந்தும் வாசன் நிலைமை "அரசனை நம்பி புருஷனை கைவிட்டவள்" கதையாகி விட்டது. வாசன் ஆதரவாளர்கள் போட்டியிட்டாலும் 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டியிடனும் இந்த சின்னம் யாருக்கு தெரியும்?

    திமுக பேச்சாளர்களின் நாக்கில் சனி இருக்குது அதாவது நபி ( ஸல் ) அவர்களோடு கலைஞரை சம்பந்தபடுத்தி பேசிவிட்டார், 5 + 5 சீட்டு வாங்கியவர்கள் அமைதி காத்தாலும் பொதுமக்கள் மன்னிப்பதாக இல்லை இந்த நிலைமையில் திமுக வெல்லுமா என்ற சந்தேகம் இப்போது வலுவாக இருக்கும் போது காங்கிரஸ் போட்டியிட்டாலும் வெல்லுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.