.

Pages

Monday, June 10, 2013

அதிரை மார்க்கெட்டில் விறுவிறுப்புடன் விற்பனையாகும் மீன்கள் !

வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பரப்பில் வாழும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 45 நாட்கள் மீன் பிடிப்பதற்கு அரசால் தடை விதிக்கப்படும். இந்த ஆண்டுக்கான தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கியது.
இந்த தடை காலம் கடந்த [ 30-05-2013 ] அன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து கடலோரப்பகுதியாகிய அதிரை மற்றும் அதனைச்சுற்றி வசிக்கக்கூடிய மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

கடந்த சில நாட்களாகவே மீன்கள் அதிகளவில் மீனவர்களின் வலைகளில் சிக்குவதால் மீன்கள் வரத்து அதிகமாக காணப்படுகின்றன. இதனால் அதிரையின் மிகப்பெரிய மீன்மார்க்கெட் என கருதப்படுகிற கடைத்தெரு மீன்மார்கெட்டிற்கு அதிகளவில் மீன்கள், இறால், நண்டு போன்றவை விற்பனைக்கு வருகின்றன.

மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் வெளியூர் வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு மீன்கள், இறால், நண்டு போன்றவற்றை மொத்தமாக வாங்கிச்செல்கின்றனர்.














11 comments:

  1. கலர்ஃபூல் கலெக்சன் ஃபோட்டோ கலக்குது அதிரை நியூஸ்

    நேற்று இருதயம் சம்மந்தமான தகவல் இன்று கண்டதையும் (மீன்கள்,இறால் போன்ற கடல் இனத்தை)சாப்பிடுங்கன்னு சபாஷ்

    மீன்கள் வரத்து அதிகமென்று சொல்லித்தாம் தெரியவேண்டியதில்லை வியாபாரிகளின் முகபாவனையிலேயே தெரிகிறது மீன்கள் வரத்தின் அதிகம் மற்றும் தொழிலில் பரக்கத் என்று.

    படம் எண் 11: மீன்களை விட ஈக்களின் தோற்றமே அதிகம் தென்படுகிறது....

    படத்தின் மூலம் எங்களுக்கு மீன்,இறால் மற்றும் நண்டு உணவுகள் பரிமாரியதற்கு நன்றி அ.நியூஸ்

    ReplyDelete
  2. மீன்கள் விறுவிறுப்புடன் விற்பனையானாலும் விலைதான் குறைஞ்ச பாடில்லை !? :)

    ReplyDelete
  3. // படம் எண் 11: மீன்களை விட ஈக்களின் தோற்றமே அதிகம் தென்படுகிறது...//

    ஆஹா கேமிராக்குத்தான் நன்றி சொல்லணும் ஈயையும் விட்டுவைக்கவில்லை பாருங்க :)

    ReplyDelete
  4. நமதூர் மீன் மார்க்கட்டை படம் பிடித்து எங்களுக்கும் காண்பித்த அதிரை நியூஸிற்கு மிக்க நன்றி.

    என்னதான் மீன் அதிகமாக கிடைத்தாலும் நமதூரை விட துபாயில் தரமான மீன்கள் மலிவாக கிடைக்கிறதே.? அது எப்படி..? இங்கு ஒரு மனு (மனு என்றால் 4 கிலோ) ஒரு முழத்தை விட பெரிய சைஸ் பன்னாமீன் 5அல்லது 6 மீன் 40 அல்லது 45திர்ஹம் விற்கிறது. இந்திய பணத்தின் மதிப்பு 600/ 650 க்கு கிடைக்கிறது.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    சபாஷ், பலே பலே, சூப்பர் கலக்கல்,
    மீன் சாப்பிட்ட பின்பு மாம்பழத்தை சாப்பிடனுமா? அப்படீன்னா சாப்பிட்டுவோம்.

    அந்த கொடுவா பிசுக்கு இருக்கே அதுகூட முருங்கைகாயை போட்டு தண்ணீர் கலக்காத தேங்காய் பாலை ஊற்றி அவியல் வைத்தால் ஆஹா என்ன ருசி தெரியுமா?

    வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. Wow wonderful uploading by adirai news and colorful collection of fishes in adirai market glorious beginning of fishing to the fishermen

    ReplyDelete
  7. நம்ம ஊர் மீன் மார்கட்டை படம்பிடித்து கான்பித்த அதிரை நியூசுக்கு நன்றி. நம்ம ஊரில் மீன் விற்பனை முறையையில் மாற்றம் வேண்டும். இன்றைய நிலையில் ஏழை மக்கள் மிகவும் சிரமபடுகிறார்கள். பணக்காரர்கள் மீன் விர்பனையளர்கள் கேட்கும் பணத்தை அள்ளி கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்கள் ஏழை மக்களோ திண்டடிகொண்டுள்ளார்கள். மற்ற ஊரில் இருப்பது போல் நம் ஊரிலும் கிலோவுக்கு இவ்வளது என்று நிர்னயம் செய்தால் எல்லோரும் பயன் அடைவார்கள். இங்கே ஏமாற்றும் வேலை இருக்காது. யார் செய்வது இதை???

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி.மீன்கள் குவியல் படுஜோர் புகைப்படகள் அருமை.

    ReplyDelete
  9. Mohamed Yousuf10 June 2013 14:01
    நம்ம ஊர் மீன் மார்கட்டை படம்பிடித்து கான்பித்த அதிரை நியூசுக்கு நன்றி. நம்ம ஊரில் மீன் விற்பனை முறையையில் மாற்றம் வேண்டும். இன்றைய நிலையில் ஏழை மக்கள் மிகவும் சிரமபடுகிறார்கள். பணக்காரர்கள் மீன் விர்பனையளர்கள் கேட்கும் பணத்தை அள்ளி கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்கள் ஏழை மக்களோ திண்டடிகொண்டுள்ளார்கள். மற்ற ஊரில் இருப்பது போல் நம் ஊரிலும் கிலோவுக்கு இவ்வளது என்று நிர்னயம் செய்தால் எல்லோரும் பயன் அடைவார்கள். இங்கே ஏமாற்றும் வேலை இருக்காது. யார் செய்வது இதை???

    வர்த்தக சங்கம் முயர்சிக்குமா?.........

    ReplyDelete
  10. எங்கே ரெங்காயி யெ காணோம் ,

    நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. // எங்கே ரெங்காயி யெ காணோம் ,

      நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன் ...//

      9 வது படத்தில் உள்ளார் பாருங்கள் சகோதரரே

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.