பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம்
பிளஸ்–1 வகுப்பு முதல் ஆராய்ச்சிப்படிப்பு படிப்பவர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை www.momascholarship.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகை என்ற தலைப்பை தேர்வு செய்து அதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி, வருமானச்சான்று, கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி ஆகிய ஆவணங்களை இணைத்து கையொப்பமிட்டு கல்வி நிலையங்களில் புதிய கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை செப்டம்பர் 30–ந் தேதிக்குள்ளும், புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 10–ந் தேதிக்குள்ளும் தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கி கணக்கு எண் அவசியம்
சிறுபான்மையின மாணவ, மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் பரிசீலித்து புதிய விண்ணப்பங்களை அக்டோபர் 10–ந் தேதிக்குள்ளும், புதுப்பித்தல் விண்ணப்பங்களை டிசம்பர் 20–ந் தேதிக்குள்ளும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கில் வழங்கப்படுவதால் மாணவ, மாணவிகள் தங்களது வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி கிளை குறியீடு எண்களை தவறாது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன் அடையுங்கள்.
பயனுள்ள பதிவு அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
மிக அவசியமான தகவல் பதிவுக்கு நன்றி.
ReplyDelete