.

Pages

Wednesday, June 19, 2013

அதிரை அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா !

அதிரையின் நல்லடையாளங்களுள் ஒன்று அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி. வருடந்தோறும் பல்வேறு ஆலிம்களை உருவாக்கி அனுப்பி வைத்த சிறப்பை தொடர்ந்து பெற்றுவருகிறது.

இன்று [ 19-06-2013 ] காலை 9 மணியளவில் ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் வளாகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

L.M.S. அப்துல் காதர் ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் K.T. முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தி மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கி கெளரவித்தார்கள்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை அல் மதினத்துல் இல்ம் கல்லூரியின் முதல்வர் A. முஹம்மது ஷப்பீர் அலி ஆலிம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மேலும் கல்லூரியின் பேராசிரியர்கள் பலர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.

இதில் அதிரையின் பல்வேறு மஹல்லாக்களை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் பெரும்திரளாக விழாவில் கலந்துகொண்டனர். விழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் நிர்வாகிகள் சிறப்பாக செய்துருந்தனர்.







4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. அதிரையில் அரபிக் கல்லூரி அமைந்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய விஷயம். நமதூர் ஆலிம்களும், ஆலிமாக்களும் நிறைந்த ஊர். பல ஆலிம்களையும்,ஆலிமாக்களையும் உருவாக்கி கொண்டிருக்கும் ஊர்.

    இவ்வருட பட்டமளிப்பு நிகழ்வை கண்ணியப்படுத்தும் விதத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்த அரபிக்கல்லூரி நிர்வாகிகளுக்கும், இவ்வருடம் பட்டம்பெற்ற சகோதர சகோதரிகளுக்கும் எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற அனைத்து ரஹ்மானியா மதரஸா மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  4. ஆலிம் பட்டம் பெற்ற அனைத்து ரஹ்மானியா மதரஸா மாணவர்களுக்கும் எனது துவாவும் வாழ்த்துக்கள்ளும்............

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.