.

Pages

Friday, June 21, 2013

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் குறைகளை கண்டறிய அதிரை உள்ளிட்ட கடலோரப்பகுதியில் 'ஆபரேஷன் ஹம்லா' ஒத்திகை நிகழ்ச்சி !

கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் குறைகளை கண்டறியவும் ஆண்டு தோறும் இருமுறை 'ஆபரேஷன் ஹம்லா' என்ற பெயரில் கடலோர மாவட்டங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ஆபரேஷன் ஹம்லா ஒத்திகை நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.
தஞ்சை மாவட்டம்  அதிரை, சேதுபாவாசத்திரம் கடலோரப்பகுதியில் திருச்சி சரக டிஐஜி முகமது ஹனிபா உத்தரவின்பேரில் தஞ்சை எஸ்பி தர்மராஜ், பட்டுக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி, தேவ தாஸ், ரவிச்சந்திரன், செங்கமலக்கண்ணன், கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமை யில் 125க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் 2 படகுகளில் சென்று மீனவர்களிடம் அடையாள அட்டை மற்றும் படகு பதிவு புத்தகங்கள் உள்ளதா, சந்தேகத்திற்கிடமான வகையில் படகுகள் செல்கிறதா என சோதனையிட்டனர். கிழக்கு கடற்கரைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Image Credit : Mohamed Ismail
News Source : Dinakaran

3 comments:

  1. பதிவுக்கு நன்றி
    அதிரை கடலோரம் முழுவதும் அதிரடி சோதனையில் அதிரை காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.....

    ReplyDelete
  2. pathivuku nandri

    seru kulanday kalukana daily programe erunthal ennum serapukureyataa erukum.


    poduwana nadunilayana oodagamaka erunthal ennum serapaga amaiyum

    ADIRAI NEWS

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.