.

Pages

Wednesday, June 5, 2013

அதிரையில் தாண்டவமாடும் கனரா வங்கி.



வங்கி அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றது?

இந்தியாவில் வங்கிகளின் ஒழுங்கு முறை சட்டத்தின்படி (Banking Regulation Act) வங்கி என்பது பொதுமக்களிடமிருந்து அவர்களுடைய சேமிப்பை திரட்டி அதை தேவையுள்ளவர்களுக்கு கடனாக வழங்கவோ அல்லது முதலீடு செய்யவோ நிறுவப்பட்ட ஒரு நிறுவனம்.

சுருக்கமாக கூறினால். பொதுமக்களின் சேமிப்பை முதலீடாக மாற்றும் ஒரு இடைநிறுவனம் (Intermediary) என கூறலாம். 

இப்படியாக நமதூரில் இந்திய அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற பெரும்படியான வங்கிகள் வரிசையில் “கனரா வங்கி “இந்தியன் வங்கி “தனலெட்சுமி வங்கி “ஸ்டேட் வங்கி இந்தியா “கூட்டுறவு வங்கி இவ்வங்கிகள் இப்படி ஒருபுறம் இயங்கிக் கொண்டு இருக்க, இதையும் தாண்டி கடன் கொடுக்கின்றோம் என்ற பெயரில் நெருப்பு வட்டியை விழுங்கிக் கொண்டிருக்கும் குட்டி வங்கிகள் ஆங்காங்கே இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

இதில் அதிக வாடிக்கையான பெருமக்களை பெற்றிருப்பது கனரா வங்கி, ஆனால் வாடிக்கையாளர்கள் படும் பாடு சொல்லில் மாளாது. தற்போது இ.சி.ஆர்.பெருவழிச் சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் கனரா வங்கிக்கு போதுமான இடவசதி இல்லை, எப்போது பார்த்தாலும் டவுன் பஸ் போலவும், ரேஷன் கடை போலவும், மீன் மார்கட் போலவும் மக்கள் பிதுங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

சிறு தொழில் பெரு தொழில் புரிவோர், குடும்பத்தில் உள்ளோர், மாணாக்கர்கள், விவசாயிகள், சுற்று வட்டார மக்கள், வெளி மாநிலங்களில் இருப்போர், வெளி நாடுகளில் இருப்போர், அரசு அலுவலர்கள், வெளி ஊர்களில் இருந்து வருபவர்கள், உள்ளூரில் இருந்து வருபவர்கள் இப்படியாக கனரா வங்கி தினம் தினம் பிதுங்கி வழிகின்றது.

குடிப்பதற்கு குடி நீர் கிடையாது, வாடிக்கையாளர்களுக்கு போதுமான இடவசதி கிடையாது, ஆண் பெண் என்று தனி வரிசை கிடையாது, வாடிக்கையாளர்களுக்கு தங்கநகைகள்  பாதுகாப்பு பெட்டக வசதி போதுமானது கிடையாது(Locker System), வயோதிகர்களுக்கு முன்னுரிமை கிடையாது, சரியான காற்றோட்டம் கிடையாது, போதுமான அலுவலர்கள் ஊழியர்கள் கிடையாது, வங்கி சேவையில் துரிதம் கிடையாது, ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உதவிட வாடிக்கையாளர் சேவை கிடையாது.

வங்கிக்கு வரும் வாடிக்கையாளர் அமரும் இடத்திற்கு மிக அருகில் மும்முனை மின் மாற்றிக்கு உண்டான உபகரங்கள் பொருத்தப்பட்டு இருக்குது, இது மிகவும் அபாயகரமானது, சில சமயம் மின் கசிவு ஏற்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு? மேலும் தீயணைப்பு சாதனம் ஏதும் அவிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாடிக்கையாளர்கள் முன்கதவை திறந்து கொண்டு வங்கிக்குள் நுழையும் பொது தாராளமாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையமுடியாது காரணம் நெருக்கமான இடவசதி காரணமாக சில பேர் இருக்கையில் அமர்ந்தும் சில பேர் நின்றுகொண்டும் இருப்பதினால்.

வங்கிக்கு இன்னும் அதிகம் வாடிக்கையாளர்கள் தேவை, கோடி கணக்கில் பணவைப்பு தேவை, டன் கணக்கில் தங்க நகைகள் தேவை, அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்னும் கூடுதலாக சம்பளம் தேவை, வாடிக்கையாளர்கள் எந்த கேள்வியும் ஊழியர்களிடம் கேட்டு விடக்கூடாது, அடிக்கடி அரசாங்க விடுமுறை, அதுக்கு விடுமுறை, இதுக்கு விடுமுறை, ஏப்பம் விட்டால் விடுமுறை, கெட்ட கனவு கண்டால் விடுமுறை இப்படி பல விடுமுறைகளை விரும்பும் ஊழியர்கள்..

முப்பத்தைந்து ஆண்டுகளாக வான் பரிதா கட்டிடத்தில் இயங்கி வந்த கனரா வங்கிக்கு வளர்ச்சியின் காரணமாக அதிக இடம் கொண்ட புதிய இடம் தேவைப்படும்பொழுது பழைய இடத்தைவிட இன்னும் அதிக இடவசதி உள்ள கட்டிடத்தை தேர்ந்து எடுப்பதுதான் முறையானதும் நியாயமானதுமாகும், தற்போது இயங்கி வரும் கட்டிடம் மிகவும் நெருக்கமானது, இ.சி.ஆர்.சாலையில் கணக்கில் அடங்கா வாகனப் போக்குவரத்து இருப்பதால் வங்கிக்கு வருவோர் போவோர்களுக்கு பாதுக்காப்பற்ற இடமாக இருக்கின்றது.

ஆக மொத்தத்தில் வங்கிக்கு கூடுதல் இடவசதியோடும், வரும் வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாகவும், வாகன நெரிசல்களிலிருந்து பாதுகாப்பானதும், நல்ல காற்றோட்டம் உள்ள வேறு கட்டிடம் மிக மிக அவசியம்.

தற்போதுள்ள கட்டிடம் வங்கிக்கு ஏற்றது அல்ல, வாடிக்கையாளர்களுக்கு உகந்தது அல்ல, காற்றோட்ட வசதிகள் இல்லை, வாகன நெரிசல் கடுமையாக உள்ளது. ஆகவே, வங்கியின் திருச்சி மண்டல நிர்வாகம் உடன் வந்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்தால் ஒழிய மேலே சொல்லப்பட்ட பிரச்சனையிலிருந்து வாடிக்கையாளர்களை 

திருப்த்தி படுத்த முடியாது.

குறிப்பு:-
அதிரை கனரா வங்கி விஷயமாக திருச்சி மண்டல அலுவலகம் (Circle Office)  Assistant General Manager, Mr. M.Panner Selvam அவர்களை (04 June 2013 – 02.15pm) மொபைலில் தொடர்பு கொண்டபோது மருத்துவத்திற்காக ஒரு வாரம் காலம் விடுப்பில் மதுரையில் தங்கி இருப்பதாகவும், விபரங்களை மின்னஞ்சலில் அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி உள்ளது.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.Mohamed Aliyar (Late)

16 comments:

  1. சமூகப்பணியின் ஒரு பக்கம் யாராலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத சமூக அக்கறை ஜசக்கல்லாஹ் ஹைர்

    பல தடவை நானும் இவ்வங்கிக்கு செல்வதுண்டு எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழியும் நமதூரில் இந்தியன் வங்கி வரும்முன்பாக தனலட்சுமி,கனரா இவ்விருவங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டுக்கொண்டிருந்தன ஆனால் கனரா வங்கியில் தான் கூட்டம் அலைமோதும் ஒரு ஸ்டாண்டர்ட் வங்கி என்றால் அது கனரா வங்கி தான் என்று அதிரை மக்களால் போற்றப்பட்டது.

    ஆனால் இப்பொழுது இடம்மாற்றம் செய்தது சரியான பாதுகாப்பு இல்லாத இடம்மென்பதை நமக்கு புகைப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் சகோ. ஜமால் காக்கா

    அவரது சமூக (அக்கறை) சேவை
    நமக்கு என்றென்றும் தேவை

    தற்பொழுது இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் கஸ்டமர் கேர் செய்வதில் கூடுதல் அக்கறை எடுத்து மிக அருமையாக செயல்பட்டுக்கொண்டிருகிறது, டோக்கன் முறையில் கஸ்டமரை அணுகுவது வரவேற்கத்தக்கது இந்த டோக்கன் சிஸ்டம் அனைத்து வங்கிக்கும் நிறுவினால் வாடிக்கையாளர் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்.

    ReplyDelete
  2. ஜமால் காக்காவிற்கு முதல் நன்றி. இதற்கு சீக்கிரம் முடிவு வரவேண்டும் அப்போதுதான் அடுத்த வங்கிகள் வாடிக்கையாளர்களை மதிப்பார்கள்.போதுமான இடவசதியோடு இருக்க முயற்சி செய்வார்கள்

    குறிப்பு :காலணிகள் ஏன் வெளியில் நிறுத்தவேண்டும் இது என்னா வழிபாட்டு தளமா? இல்லை தரையில் தங்கம் எதுவும் பதித்து உள்ளார்களா? இதுவும் கண்டிக்க படவேண்டும்.

    ReplyDelete
  3. Yeah that's correct bcz of the process is too delay in canara bank definitely we should take remedial measures for that insha Allah

    ReplyDelete
  4. பலே... பலே...

    விழிப்புணர்வின் உச்சக்கட்ட பதிவு !

    மிக்க நன்றி ஜமால் காக்கா

    அதிரையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் இதே நிலைமைதான். குறிப்பாக ஆண் - பெண் இருபாலரும் ஒரே இடத்தில் கூட்டமாக காணப்படுவார்கள். ஒரே புழுக்கமாகவும் காணப்படும்.

    அதே போல் ஒரு சிறிய வேலை முடித்து திரும்ப வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் தாமதமாகிவிடுவதும் உண்டு.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட திருச்சி மண்டல அலுவலரிடம் முறையிட்டு குறைகளைக் களைவது அவசியமானதொன்று.

    ReplyDelete
  5. மிக்க நன்றி ஜமால் காக்கா

    அதிரையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் இதே நிலைமைதான். குறிப்பாக ஆண் - பெண் இருபாலரும் ஒரே இடத்தில் கூட்டமாக காணப்படுவார்கள். ஒரே புழுக்கமாகவும் காணப்படும்.

    அதே போல் ஒரு சிறிய வேலை முடித்து திரும்ப வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் தாமதமாகிவிடுவதும் உண்டு.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட திருச்சி மண்டல அலுவலரிடம் முறையிட்டு குறைகளைக் களைவது அவசியமானதொன்று.

    ReplyDelete
  6. கனரா வங்கியில் நமது மக்கள் ஆடு மாட்டை போல் கேவலமாக நடத்தும் ஒரு அவலநிலையை கண்டு பல முறை கொதித்திருக்கிறேன். ஒரு காலத்தில் பெண்களுக்கு தனி இடம் இருந்தது இன்று அது இல்லை. பெண்கள் படும் சிரமத்தை அங்கே நீங்கள் பார்கலாம். வாதில் கதவு ஒரு நபர் மட்டும் நுழைவது போல் திறந்து வைத்திருப்பார்கள், உள்ளே நுழைந்தாள் இருட்டான சூழல், அது ஒருபுறம் இருக்க எதவது கேட்டால் ஒருவர் மற்றவரை காணபித்து அங்கே போகசொல்வதும் அவர் மற்றவரை காணபித்து இங்கே போகசொல்வதும் இப்படியான அவல நிலைதான் தினமும். அங்கே சண்டை காட்சிகள் தினமும் பார்கலாம். மொத்தத்தில் அது வங்கி அல்ல கருவாட்டு சந்தை. இந்த குறையை அதிரை நியூஸ் உரிய அதிகாரிகளிடம் எடுத்து செல்லுமா?

    ReplyDelete
  7. ஜமால் காக்காவிற்கு நன்றி,கனரா வங்கியில், வாடிகையலர்களுக்கு மரியாதை கிடையாது

    ReplyDelete
  8. ஜமால் காக்காவிற்கு நன்றி,கனரா வங்கியில், வாடிகையலர்களுக்கு மரியாதை கிடையாது

    ReplyDelete
  9. கனரா வங்கியில் நமது மக்கள் ஆடு மாட்டை போல் கேவலமாக நடத்தும் ஒரு அவலநிலையை கண்டு பல முறை கொதித்திருக்கிறேன். ஒரு காலத்தில் பெண்களுக்கு தனி இடம் இருந்தது இன்று அது இல்லை. பெண்கள் படும் சிரமத்தை அங்கே நீங்கள் பார்கலாம். வாதில் கதவு ஒரு நபர் மட்டும் நுழைவது போல் திறந்து வைத்திருப்பார்கள், உள்ளே நுழைந்தாள் இருட்டான சூழல், அது ஒருபுறம் இருக்க எதவது கேட்டால் ஒருவர் மற்றவரை காணபித்து அங்கே போகசொல்வதும் அவர் மற்றவரை காணபித்து இங்கே போகசொல்வதும் இப்படியான அவல நிலைதான் தினமும். அங்கே சண்டை காட்சிகள் தினமும் பார்கலாம். மொத்தத்தில் அது வங்கி அல்ல கருவாட்டு சந்தை. இந்த குறையை அதிரை நியூஸ் உரிய அதிகாரிகளிடம் எடுத்து செல்லுமா ?

    ReplyDelete
  10. ஜமால் காக்காவிற்கு நன்றி,கனரா வங்கியில், வாடிக்கையாளர்களுக்கு மரியாதை கிடையாது

    ReplyDelete
  11. தம்பி ஜமால் அவர்களே!

    உண்மையான ஒரு எழுத்தாளரின் கோபம சமூக ஆர்வலரின் விருப்பம் மனித நல விரும்பியின் எச்சரிக்கை யாவும் கொப்பளிக்கக் கண்டேன்.

    இதேபோல் நடக்கும் அத்துமீறல்களை சுட்டிக் காட்டுவதும் தட்டிக் கேட்பதும் ஒரு ஊடகத்தின் கடமை. மிகுந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. //குறிப்பு :காலணிகள் ஏன் வெளியில் நிறுத்தவேண்டும் இது என்னா வழிபாட்டு தளமா? இல்லை தரையில் தங்கம் எதுவும் பதித்து உள்ளார்களா? இதுவும் கண்டிக்க படவேண்டும்.//

    அதானே! முழுக்க முழுக்க குளிர்சாதனம் பொருத்தப் பட்ட அரபு நாடுகளின் வங்கிகளில் கூட இல்லாத இந்த முறை ஏன்? வங்கிக்குள் மகாலஷ்மி இருக்கிறாளா? வினோதம்.

    ReplyDelete
  13. \\அதானே! முழுக்க முழுக்க குளிர்சாதனம் பொருத்தப் பட்ட அரபு நாடுகளின் வங்கிகளில் கூட இல்லாத இந்த முறை ஏன்? வங்கிக்குள் மகாலஷ்மி இருக்கிறாளா? வினோதம்.//

    இ.அ காக்கா சொல்வதுபோல் அப்படி மரியாதை செய்கின்ற நோக்கத்திலிருந்தால் ஊழியர்கள் மட்டும் காலணிகளை அணியலாமா? எந்த விதத்தில் நியாயம்?

    ReplyDelete
  14. விழிப்புணர்வின் உச்சக்கட்ட பதிவு !

    மிக்க நன்றி ஜமால் காக்கா.

    எந்த ஒரு நிறுவனமும் வாடிகையாளர்கள் இல்லாமல் இயங்க முடியாது என தெரிந்தும் இந்த வங்கி நிர்வாகம் ஏன் வாடிக்கையாளர்களை அலட்சிய படுத்துகிறது?
    இந்த பதிவின் மூலம் சரியான முடிவு கட்டனும் காக்கா...

    ReplyDelete
  15. நம்மிடமே பணத்தை பெற்றுக் கொண்டு வேலை புரியும் கனரா வங்கி ஊழியர்கள் நாம் சற்று தாமதமாக சென்றால் நாய் குதர்வது போல் குதருகிரார்கல்..........

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியும் இருக்குமா?
      அதுக்கு என்ன செய்யலாம்?
      பேசாம புடிச்சி கூண்டுக்குள் போட்டுவிட்டால்!!

      கூண்டுக்கு போட்டுவிட்டால் அப்புறம் நமக்கு யார் பணம் தருவது?

      போனாபோவுது போகட்டும்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.