.

Pages

Wednesday, June 12, 2013

அதிரைப் பேரூராட்சியைக் கண்டித்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் ரத்து !

அதிரைப் பேரூராட்சியின் 10 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீர் வாய்க்கால் அடைப்புகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஏற்படும் கால தாமதத்தைக் கண்டித்து பொதுமக்களின் சார்பாக சாலை மறியல் போராட்டத்திற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு துண்டு பிரசுரமாகவும், நாளிதழ் மற்றும் இணையத்திலும் செய்தியாக வெளியிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து அவசரமாக கவனத்தில் எடுத்துக்கொண்ட அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பந்தபட்டோரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பாதிப்புக்குள்ளான பகுதிகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு வருகின்ற இரண்டு மாதத்திற்குள் சரிசெய்து கொடுப்பதாக எழுத்து மூலம் கையொப்பமிட்டு உறுதி செய்ததையடுத்து நாளை [ 13-06-2013 ] நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் அதிரை பேரூராட்சி தலைவர், மாவட்ட பேரூராட்சி உதவி பொறியாளர், பேரூராட்சி உதவி பொறியாளர், அதிரை சப்இன்ஸ்பெக்டர், 10 வது வார்டு உறுப்பினர் ஆகியரோடு அதிரை Y. மைதீன் தலைமையில் பொதுமக்கள் சிலர் கலந்து கொண்டு கையொப்பமிட்டுள்ளனர்.



3 comments:

  1. அன்பு சகோதரர் நிஜாம் அவர்களின் குழந்தை பிறந்த அன்றே மூன்று வெற்றி செய்திகளை தாங்கி வந்திருக்கிறார் சமுக ஆர்வலரின் குழந்தை அல்லவா முதலில் அவரது பகுதியான பிலால்நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலை போடும் பணி தொடக்கம், .கனரா வங்கியின் துரித நடவடிக்கை, 10 வார்டு மக்களின் போராட்டம் வாபஸ் பேரூராட்சி உறுதி .மூன்றுமே வெற்றி செய்திகள் இன்ஷா அல்லாஹ் மென்மேலும் அவர் வளர வளர வெற்றி செய்திகளாக கொண்டு வந்து சேர்க்க வல்ல அல்லாஹுவிடம் துவா செய்வோம்மாக ஆமீன்

    ReplyDelete
  2. பதுவுக்கு நன்றி.

    எதுவாக இருந்தாலும் சுமூகமான முறையில் மக்கள் பயன்படும் வகையில் நடந்தால் நல்லது, அதே நேரம் காலதாமதம் இல்லாமல் பார்த்துக்கொள்வது பொறுப்பில் உள்ளவர்களின் கடமை.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. நல்லது நடந்தால் சரிதான் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.