.

Pages

Friday, October 31, 2014

அமைச்சர் வைத்திலிங்கம் நாளை அதிரை வருகை ! தற்கொலை செய்துகொண்ட மணி குடும்பத்துக்கு ரூ 3 லட்சம் நிதி உதவி !

அதிமுக பொதுச் செயலாளரும்,முன்னாள் முதல்வருமான  ஜெயலலிதா சிறையிலடைக்கப் பட்ட தகவல் அறிந்து அதிமுகவினர் பலர் தற்கொலை மூலமாக உயிரை மாய்த்துக் கொண்டனர். சிலர் அதிர்ச்சியில் மாரடைப்பில் காலமானார்கள்.

ஜெயலலிதா கைதால் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த 193 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.

தற்கொலை செய்து கொண்ட உயிரிழந்தவர்களில் நமதூர் அதிரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் M. மணி (வயது45),யும் ஒருவர். இவர் தஞ்சை ஆற்றின் பாலத்தின் தடுப்புசுவர் மீது ஏறி, ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும். ஜெயலலிதா வாழ்க என்று கோஷமிட்டபடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் நாளை காலை அதிரைக்கு வருகை தரும் மாநில அமைச்சர் திரு. வைத்திலிங்கம் தற்கொலை செய்து கொண்ட மணி குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து ஆழந்த இரங்கலை தெரிவிக்க இருக்கிறார். அத்தோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கும் ரூ. 3 லட்சம் நிதியுதவியை மணி குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இருக்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.