.

Pages

Sunday, October 19, 2014

அதிரையில் இந்திய தேசிய லீக் கட்சியினர் நடத்திய செயல்வீரர் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

அதிரையில் இன்று இரவு இந்திய தேசிய லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் செயல்வீரர்கள்  கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில பொருளாளர் மதுக்கூர் மைதீன் தலைமை வகித்தார். இதில் தஞ்சை தெற்கு மாவட்டம் மற்றும் மல்லிபட்டினம் கிளை ஆகிய பகுதிகளுக்கு கீழ் கண்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் :
தலைவர் : பாவா மைதீன்
துணை தலைவர் : ரியாஸ் அஹமது
செயலாளர் : ஜெஹபர் சாதிக்
பொருளாளர் : நிஜாமுதீன்
பழனி பாபா பாசறை : சேக்
தொண்டர் அணி :பாஷித்
இளைஞர் அணி : அப்துல் அஜீஸ்
மாணவர் அணி :ஆசிர் முஹம்மது

மல்லிபட்டினம்  கிளையின் புதிய நிர்வாகிகள் :
தலைவர் : ரஹ்மத்துல்லா
துணை தலைவர் : சேக் அலாவுதீன்
செயலாளர் : பைசல்
இணை செயலாளர் : சுபஹான்
பொருளாளர் : ஆசாத்

முன்னதாக கூட்டத்தில் சமீபத்தில் நிகழ்ந்த எஸ்.பி பட்டினம் காவல் நிலைய படுகொலையில் உயிர் இழந்த செய்யது முஹம்மது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், சுற்றுக்கொன்ற காவல்துறை உதவி ஆய்வாளர் காளிதாஸை கொலை வழக்கில் கைது செய்யப்படவும், கோவை சிறையில் அல்- உம்மா இயக்க தலைவர் பாஷா அவர்களை கொச்சையாக பேசிய கோவை சிறை துணை கண்கானிப்பாளர் செந்தில் குமாரை பணி நீக்கம் செய்யவும், அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடு உள்ளிட்டவற்றை சீர் செய்யவும், பட்டுக்கோட்டை பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான வக்ஃபு சொத்தை பாதுகாக்கவும், இழந்த சொத்தை மீட்க போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இன்றைய கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் இந்திய தேசிய கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். கூட்டத்தில் அதிரை பட்டுக்கோட்டை மல்லிபட்டினம் பகுதி இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
















No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.