.

Pages

Friday, October 31, 2014

முன்னாள் மாணவர்களின் மெய்சிலிர்க்க வைத்த சந்திப்பு ! [ படங்கள் இணைப்பு ]

முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் இன்று முத்துப்பேட்டை கழக உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1974 ஆம் ஆண்டிற்கு முன்னதாக கல்வி பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். தாத்தாவாக புரோமஷன் பெற்றிருக்கும் இவர்கள் அனைவரும் தற்போது தொழில் அதிபராகவும், அரசு துறையில் பணி புரிபவராகவும், விவசாயி, அரசியல் பிரமுகர், சமூக ஆர்வலர் என பல்வேறு பொறுப்புகள் வகித்து, பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சி பல நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த முயற்சிக்கு பலனளிக்கும் விதத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது.

இன்றைய சந்திப்பில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிகொண்டனர். பள்ளி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஒவ்வொன்றாக பேசியது பார்ப்போர் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. இந்த சந்திப்பு ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற ஆவலை கலந்து கொண்ட அனைவரும் தெரிவித்தனர். மக்கள் பொதுநல தொண்டு புரிவது குறித்தும், கல்வி பணி ஆற்றுவது குறித்தும் பேசப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை முத்துப்பேட்டை தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் நா. இராசமோகன், முத்துப்பேட்டை சமூக ஆர்வலர்கள் சூனா ஈனா, கதர் சம்பந்தம் ஆகியோர் செய்து இருந்தனர். வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் வாழும் முன்னாள் மாணவர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திப்பு நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறினார்.

படங்களுடன் செய்தி தொகுப்பு : 
சூனா ஈனா - முத்துப்பேட்டை






1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.