.

Pages

Tuesday, October 21, 2014

காணவில்லை !

கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் காலஞ்சென்ற முஹம்மது சாலிஹு. இவருடைய மகன் முஹம்மது கான் ( வயது 50 ) இவருக்கு மனைவி மற்றும் தமீம் ( வயது 20 ) , ஹாரூன் ( வயது 15 ) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பணி புரிவதற்காக ஜோர்டான் நாட்டிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இன்று வரை குடும்பத்தினருடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரை ஜோர்டான் நாட்டில் பார்த்ததாக சில நண்பர்கள் இவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து உள்ளனர். இதுவரையில் இவரது குடும்பத்தினரால் இவரை தொடர்புகொள்ள இயலவில்லை. இவரின் வருகைக்காக இவரது குடும்பத்தினர் தினமும் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

இவரைப்பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கீழ்கண்ட அலைப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : சுஹைப், பட்டுக்கோட்டை 
அலைப்பேசி : 0091 9443905055

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.