.

Pages

Saturday, October 25, 2014

செக்கடி குளம் - ஆலடிக்குளம் - காட்டுக்குளம் ஆகியவற்றிற்கு ஆற்று நீர் வருகை ! [ படங்கள் இணைப்பு ]

கடந்த சில நாட்களாக அதிரையில் பெய்த தொடர் மழையால் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் நீர் மட்டம் சற்று உயர்ந்திருக்க கூடும். கடந்த மாதம் சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதலாவதாக அதிரை பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக இருந்து வரும் காட்டுகுளத்திற்கு சிஎம்பி வாய்க்கால் வழியாக ஆற்று நீர் வந்தடைந்தது. இதை தொடர்ந்து மரைக்கா குளத்திற்கு தண்ணீர் வந்தது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆற்று நீர் சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள குளங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. முதலாவதாக காட்டுகுளத்திற்கும். இதனை தொடர்ந்து செக்கடி குளம், ஆலடிகுளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிஎம்பி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள், அப்பகுதி இளைஞர்கள் முன்னின்று சரிசெய்து வருகின்றனர். மீண்டும் ஆற்று நீர் அதிரை பகுதியில் வந்து கொண்டிருப்பது உள்ளூர் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் தின தினங்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும் என கூறப்படுகிறது.











4 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    வீரமான முயற்சி, விவேகமான பலன். விருப்பப்படியே மக்களின் ‎ஆனந்தம், தூரம் நின்றாலும் தூங்காத உள்ளங்கள் இனி தூங்கும்.‎

    எல்லாப் புகழும் இறைவன் ஒருத்தனுக்கே.‎
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.