பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருவாரூர் - திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை- அதிரை - பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை திட்ட பணியை உடனடியாக தொடங்க கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் முத்துப்பேட்டை அஞ்சல் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழுவின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவி, வீடு கட்ட நிதி உதவி, மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் - உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள் :
சூனா ஈனா ( முத்துப்பேட்டை )
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பொதுமக்களுக்கு இடையூறுகள் இல்லாமால் போராட்டம் நடத்துவதே சாலச்சிறந்தது.
வாழ்ந்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com