சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய தரப்பில் ஜாமின் கேட்டு, பெங்களூரு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடியானது. அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று 63வது மனுவாக இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தத், நீதிபதிகள் மதன் பி லோகூர், சிக்ரி ஆகியோர் கொண்ட முதன்மை பெஞ்ச் ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை விசாரித்தது.
ஜெயலலிதா தரப்பில் பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடினார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்தது தான் என்றும், எனவே, இந்த வழக்கில் தன்னுடைய கருத்தை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா ஜாமின் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று வழங்கியது. அதில், ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்கியும், தண்டனையை நிறுத்தி வைத்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேல் முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.
ஜெயலலிதா தரப்பில் பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடினார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்தது தான் என்றும், எனவே, இந்த வழக்கில் தன்னுடைய கருத்தை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா ஜாமின் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று வழங்கியது. அதில், ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்கியும், தண்டனையை நிறுத்தி வைத்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேல் முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.