கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியதை அடுத்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. குளுமையாக காட்சியளிக்கும் இப்பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
அதிரை கடற்கரை பகுதியில் அடர்ந்த அலையாத்தி காடுகள் அமைந்துள்ளது. இக்காடுகளுக்கு வருடந்தோறும் அக்டோபர் மாதத்திலிருநது டிசம்பர் மாதம் வரை 20 க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து பலவிதமான நீர்ப்பறவைகள் வருவது வழக்கம்.வெளிநாட்டில் இருந்து வருகின்ற பறவைகள் மார்ச் மாதம் வரை தங்கி இருக்கும். முட்டையிட்டு குஞ்சு பொரித்து பின்னர் தாய்நாடுகளுக்கு சென்றுவிடும்.
இப்போது பறவைகள் சீசன் துவங்கி இருப்பதால், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்கா, ஜப்பான், சைபீரியா, ஆஸ்திரேலியா, மலேசியா, பாகிஸ்தான், இலங்கை என 20 க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளுக்கு குளக்கிடா, செங்கால்நாரை, கூனி எரிச்சான், மயில்கால் கோழி, பாம்புதாரா, நத்தகொத்தி நாரை, பவளக்கால் உள்ளான், பனங்கொட்டை சிறவி, பூநாரை, கடல் காவா என 50 க்கு மேற்பட்ட வகையான நீர் பறவைகள் லட்சக்கணக்கில் அலையாத்தி காடுகளில் தங்கி உள்ளன. இப்பகுதியில் வெளிநாட்டு பறவைகள் ஆக்கிரமித்துள்ள காட்சி ரம்மியமாக உள்ளது.
'நிருபர்' அதிரை செல்வகுமார்
அதிரை கடற்கரை பகுதியில் அடர்ந்த அலையாத்தி காடுகள் அமைந்துள்ளது. இக்காடுகளுக்கு வருடந்தோறும் அக்டோபர் மாதத்திலிருநது டிசம்பர் மாதம் வரை 20 க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து பலவிதமான நீர்ப்பறவைகள் வருவது வழக்கம்.வெளிநாட்டில் இருந்து வருகின்ற பறவைகள் மார்ச் மாதம் வரை தங்கி இருக்கும். முட்டையிட்டு குஞ்சு பொரித்து பின்னர் தாய்நாடுகளுக்கு சென்றுவிடும்.
இப்போது பறவைகள் சீசன் துவங்கி இருப்பதால், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்கா, ஜப்பான், சைபீரியா, ஆஸ்திரேலியா, மலேசியா, பாகிஸ்தான், இலங்கை என 20 க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளுக்கு குளக்கிடா, செங்கால்நாரை, கூனி எரிச்சான், மயில்கால் கோழி, பாம்புதாரா, நத்தகொத்தி நாரை, பவளக்கால் உள்ளான், பனங்கொட்டை சிறவி, பூநாரை, கடல் காவா என 50 க்கு மேற்பட்ட வகையான நீர் பறவைகள் லட்சக்கணக்கில் அலையாத்தி காடுகளில் தங்கி உள்ளன. இப்பகுதியில் வெளிநாட்டு பறவைகள் ஆக்கிரமித்துள்ள காட்சி ரம்மியமாக உள்ளது.
'நிருபர்' அதிரை செல்வகுமார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.