பட்டுக்கோட்டையில் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் காவல் சரகம், தெற்கு நாணலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி சிவசுப்பிரமணியனின் மகன் மாதவன் (20). இவர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையிலுள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அதே பகுதியிலுள்ள பத்திரப் பதிவாளர் அலுவலக மாடி வராந்தாவிலிருந்து மாதவன் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாதவன் இறந்தார்.
இதுகுறித்து மாதவனின் தந்தை சிவசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில்
பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் செவ்வாய்க்கிழமை முற்பகல் நண்பர்கள் அழைப்பதாகக் கூறி மாதவன் கடையிலிருந்து வெளியே சென்றதும், மாலையில் அவர் பத்திரப் பதிவு அலுவலக மாடி வராந்தாவிலிருந்து கீழே விழுந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, காதல் பிரச்னை காரணமாக மாதவன் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு பிரச்னைக்காக யாரேனும் அவரை மாடியிலிருந்து கீழே தள்ளிக் கொலை செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமணி
திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் காவல் சரகம், தெற்கு நாணலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி சிவசுப்பிரமணியனின் மகன் மாதவன் (20). இவர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையிலுள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அதே பகுதியிலுள்ள பத்திரப் பதிவாளர் அலுவலக மாடி வராந்தாவிலிருந்து மாதவன் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாதவன் இறந்தார்.
இதுகுறித்து மாதவனின் தந்தை சிவசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில்
பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் செவ்வாய்க்கிழமை முற்பகல் நண்பர்கள் அழைப்பதாகக் கூறி மாதவன் கடையிலிருந்து வெளியே சென்றதும், மாலையில் அவர் பத்திரப் பதிவு அலுவலக மாடி வராந்தாவிலிருந்து கீழே விழுந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, காதல் பிரச்னை காரணமாக மாதவன் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு பிரச்னைக்காக யாரேனும் அவரை மாடியிலிருந்து கீழே தள்ளிக் கொலை செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமணி
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.