.

Pages

Thursday, October 16, 2014

ஜொலிக்க இருக்கும் செக்கடி குளம் - ஒரு நேரடி பார்வை ! [ படங்கள் இணைப்பு ]

செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு குளத்தை சுற்றி காணப்படும் மேடுகளை அகலப்படுத்தி பாதுகாப்பான முறையில் நடை மேடை அமைக்கவும், நடைமேடையின் பக்கவாட்டில் புற்களை அமைத்து நவீனப்படுத்தி, நடை மேடையின் இருபுறமும் செடிகள், மரங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தபட்டு வருகிறது.

முன்னதாக குளத்தின் வடமேற்கு பகுதியில் காணப்படும் நடைமேடையிலிருந்து மணல் சரிந்து வாய்க்காலில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக செக்கடி குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக 3 அடி அகலமுள்ள சிமென்ட் குழாய்கள் வரவழைக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு சிமென்ட் கட்டாயம் கட்டப்பட்டது. இதைதொடர்ந்து பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட புற்களை செக்கடி குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள  நடைமேடையின் பக்கவாட்டு பகுதியில் புதைக்கும் பணி நடந்தது. இதையடுத்து மண் சரிவை தடுக்க குளத்தில் காணப்படும் நான்கு திசைகளின் உட்புறத்திலும் சிமென்ட் கட்டாயம் கட்டப்பட்டது.

இந்நிலையில் அதிரையில் பெய்து வரும் தொடர் மழையால் பெங்களூரிலிருந்து வரவழைத்து குளத்தின் பக்கவாட்டில் புதைக்கப்பட்ட புற்களை பாதுகாக்கும் பொருட்டும், குளக்கரையின் மீது குமித்து வைக்கப்பட்ட மண் சரிவை தடுக்கும் நோக்கிலும் தற்காலிகமாக அதன் மீது விரிப்பை கொண்டு மூடி பாதுக்கப்பட்டது.

தொடர் மழையால் ஒரு சில நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த செக்கடி குளத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. இன்று காலை முதல் குளத்தின் நான்கு திசைகளிலும் காணப்படும் நடை மேடையில் 10 அடி அகலத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ரோலர் வாகனமும், ஜேசிபி வாகனமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். குளத்தின் மீதமுள்ள அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவுற்றால் குளத்தின் தோற்றம் புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பான நடை பயிற்சியை மேற்கொள்ள முடியும் என்பது அப்பகுதியினரின் கருத்தாக இருக்கிறது. மேலும் குளம் புனரமைப்பு பணி தொடர்பாக சிறந்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நம்மிடம் எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.








12 comments:

  1. பனிகள் சிறப்பனடய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. செக்கடி குளம் மேல் பகுதியில் சுண்டைக்க வகையறை சேர்த்த ஒரு நல்ல மனிதர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மரத்தை நட்டு பேணி வளர்த்தார்கள் ஆனால் நீங்களாய் தனிச்சியாக செயல்பட்டு மரங்களை அழிக்க பணி செய்து கொண்டு இருக்கிறிர்கள் உங்களுக்கு யார் அனுமதி தந்தது ........அல்லா உங்களை பார்த்து கொண்டு இருக்கிறான்

    ReplyDelete
  3. அதிரை எக்ஸ்ப்ரஸில் வந்த புகைபடத்தை பாருங்கள்
    http://www.adiraixpress.in/2014/10/blog-post_529.html

    ReplyDelete
  4. செக்கடிக்குள கரையோரம் இருந்த பல மரங்கள் செக்கடிப்பள்ளி நிர்வாகத்தினரால் பல ஆண்டுகளுக்கு முன் வெறும் வாடகை ரூபாய் 500/- க்கு விட கட்டிடங்கள் கட்ட வெட்டி தள்ளப்பட்டது அப்பொழுது எங்கே போனது உங்கள் விழிப்புணர்ச்சி? சுண்டைக்கா வீட்டு உவைஸ் (மர்ஹூம்) காக்கா அவர்கள் வைத்தது பல மரங்கள் சில காட்டு மரங்கள் தானாக வளர்ந்தது அதையும் நடைசாலைக்கு வெட்டினால் பதிலாக பல நூறு மரங்கள் நடுவார்கள், பராமரிப்பார்கள் என்பது தெளிவு. பதிலுக்கு மரம் நட நாம் அந்த நிர்வாகத்தில் முறையிடலாம். நடைசாலைக்கு இடைஞ்சலாக உள்ள மரம் மட்டுமே வெட்டபடுகிறது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் நம் ஊருக்கும், செக்கடி பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களுக்கும் இந்த இடம் அதிரையின் ஐகான் (icon) ஆக தோற்றம் தரும் என்பதில் சந்தேகமில்லை!!

    தயவு செய்து வீண் தர்க்கத்தை தவிர்க்கவும்.

    ReplyDelete
  5. பனிகள் சிறப்பனடய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அவரவர் மனசு எப்படியோ அப்படித்தான் எழுத்துக்கள் வரும்.

    தற்போதைய செக்கடிக்குலம் அதிரையில் நல்லவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை இதுவும் பின்னாளில் எடுத்துக்காட்டும்.

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெறலாம் என்ற நியதி எல்லா ‎இடத்திலும் பொருந்தாது.‎

    இந்த இடத்தில், வாக்கிங் போகவதற்கு இடைஞ்சலாக இருப்பதால்தான் ‎மரங்கள் வெட்டப்பட்டன என்று கண்ணுற்ற மற்றும் கேட்டறிந்த வாய்கள் ‎கூறுகின்றன.‎

    அதிரையில் வாக்கிங் போக வேறு இடம் கிடைக்க வில்லையா, ஒரு ‎செடியை நட்டு அதை மரமாக வளர்ப்பதற்கு எவ்வளவு பாடு படனும் என்று ‎தெரியாதா? இதைப் பற்றி அதிகம் எழுத தேவை இல்லை.‎

    போன தலைமுறைக்கு வாக்கிங் போக ஏற்கனவே இருந்த இடம் ‎போதுமானதாக இருந்தது கை வீசி நடப்பதற்கு வசதியாக இருந்தது. ‎குளமும் அப்படியே இருந்தது.‎

    இந்த தலைமுறைக்கு கை வீசி நடக்க இடம் போதாமல் குளத்தை சுருக்கி ‎இடத்தை பெரிதாக்கி ஒரு சில மரங்களையும் வெட்டி விட்டார்கள்.‎

    வருகின்ற தலைமுறைக்கு இதுவும் போதாமல் இன்னும் குளத்தை சுருக்கி ‎இடத்தை பெரிதாக்குவார்கள்.‎

    அவர்களுக்குப் பின் வரும் தலைமுறைகளுக்கு இந்த குளமே தேவை ‎இருக்காது.‎

    இதுதான் வாழையடி வாழை. என்பது. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  8. It seems good work,But i had a feeling that we are shrinking the pond:(.

    ReplyDelete
  9. நம்ம ஊரில் நல்லது எது நடந்தாலும் பிரச்சனை, ..அப்படின்னா என்னதான் நடக்கனும் என்று நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    எதையும் கண்டுகொள்ளாமல் எனக்கேன் வம்பு என்று ஒரு சேவையிலும் இறங்காமல் போய்க் கொண்டு இருப்பவர்களை மட்டுமே இவர்கள் ஆதரிப்பார்கள் போல.

    ஒரு விசயத்தை சிலர் செய்கிறார்கள் என்றால் உடனே ஆடம்பரம்,, வீண்செலவு என்று ஏதாவது சொல்ல வேண்டியது.

    பல கோடிகளை வங்கியிலும், நிலங்களாகவும், சொத்துக்களாகவும் சேர்த்து வைத்துக் கொண்டு, ஒருத்தருக்கும் உதவாமல்.. இதுபோன்றாவது எதுவும் செய்யாமல் இருப்பவர்கள் நமதூரில் பலர் உள்ளனர். அவர்களை யாராவது கேட்டீர்களா?

    ஊருக்காகவும் தாம் வாழும் பகுதிக்காகவும் ஏதாவது செய்தால் ஏன் இப்படி குதிக்கிறீர்கள்? என்று தெரியவில்லை.

    ஒருவேளை அவர்கள் தவறு இழைத்திருந்தால் அதை அல்லாஹ் பார்த்துக் கொள்வான். நமக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் சம்மந்தப் பட்டவர்களிடம் நேரிடையாக பேசலாமே.. தவறாக இருந்தால் அதை திருத்திக் கொள்வார்களே. அதை விட்டு இங்கே வந்து பின்னூட்டமிட்டு என்ன பலன்,. ?

    எதிர் கருத்திட்டவர்களை நான் குற்றம் சொல்லவில்லை குளத்தை சுத்தம் செய்வது குறித்து தவறு இருப்பின் உடன் உரியவர்களிடம் சென்று விளக்கமளிக்கலாம். அவ்வாறு நீங்கள் அளித்த விளக்கத்தை இங்கே தெரிவிக்கலாம். அதுவே மிகச் சிறந்தது. எதிர் கருத்தில் நியாயமிருப்பின் அதை நான் வரவேற்பேன்.

    ReplyDelete
  10. முதலில் என் வாழ்த்துக்கள் !, இப்பனி சிறக்க எல்லாம் வள்ள அல்லாஹ் நற்கிருபை செய்வானாகவும்.

    ReplyDelete
  11. ANSARI - MADRAS LIVING IN CHENNAI HE DON'T CARE...ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெறலாம் என்ற நியதி எல்லா ‎இடத்திலும் பொருந்தாது.‎

    இந்த இடத்தில், வாக்கிங் போகவதற்கு இடைஞ்சலாக இருப்பதால்தான் ‎மரங்கள் வெட்டப்பட்டன என்று கண்ணுற்ற மற்றும் கேட்டறிந்த வாய்கள் ‎கூறுகின்றன.‎

    அதிரையில் வாக்கிங் போக வேறு இடம் கிடைக்க வில்லையா, ஒரு ‎செடியை நட்டு அதை மரமாக வளர்ப்பதற்கு எவ்வளவு பாடு படனும் என்று ‎தெரியாதா? இதைப் பற்றி அதிகம் எழுத தேவை இல்லை.‎

    போன தலைமுறைக்கு வாக்கிங் போக ஏற்கனவே இருந்த இடம் ‎போதுமானதாக இருந்தது கை வீசி நடப்பதற்கு வசதியாக இருந்தது. ‎குளமும் அப்படியே இருந்தது.‎

    இந்த தலைமுறைக்கு கை வீசி நடக்க இடம் போதாமல் குளத்தை சுருக்கி ‎இடத்தை பெரிதாக்கி ஒரு சில மரங்களையும் வெட்டி விட்டார்கள்.‎

    வருகின்ற தலைமுறைக்கு இதுவும் போதாமல் இன்னும் குளத்தை சுருக்கி ‎இடத்தை பெரிதாக்குவார்கள்.‎

    அவர்களுக்குப் பின் வரும் தலைமுறைகளுக்கு இந்த குளமே தேவை ‎இருக்காது.‎

    LOOK GOOD BUT BIG HOWDU ....BETTER MAKE SWIMING POOL...GOOD FOR NEW GENERATION

    ReplyDelete
  12. இப்பனி சிறக்க எல்லாம் வள்ள அல்லாஹ் நற்கிருபை செய்வானாகவும்.
    ALMOST DON BETTER FINISH THE WORK .....NEXT START SHIFA HOSPITAL WORK PLEASE STAY TOGETHER....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.