.

Pages

Saturday, October 18, 2014

மூதாட்டியிடம் செயினைப் பறிக்க முயன்ற இளைஞனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் ! சிக்கியவன் பலே திருடனா ? போலிசார் விசாரணை !

முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் லிங்கத்தடி என்ற கிராமத்தில் சாலை ஓரத்தில் உள்ள தனது வீட்டு வாசலில் கோதண்டபாணி மனைவி சீதாலட்சுமி என்ற மூதாட்டி கீற்று பின்னி கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வலியாக பைக்கிள் சென்ற ஒரு இளைஞன் மூதாட்டியிடம் தண்ணீர் கேட்டு உள்ளான். மூதாட்டி தண்ணீர் கொடுத்தார். குடித்த இளைஞன் நீண்ட நேரமாகியும் செல்லாததால் மூதாட்டி இளைஞனிடம் விசாரித்தப் பொழுது திடீர் என்று மூதாட்டி கழுத்தில் இருந்த செயினை இளைஞன் பறிக்க முயற்சித்தப் பொழுது விடாமல் மூதாட்டி கூச்சலிட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற இளைஞனுக்கு தர்ம அடி கொடுத்து மடக்கி பிடித்தனர்.

பின்னர் விசாரணையில் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர் குளம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த திராவிட செல்வம் மகன் ஸ்டாலின்(22) என்று தெரிய வந்தது. மேலும் அவனிடம் கட்டுக்கட்டாக பணங்களும் இருந்ததைக் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் இளைஞன் ஸ்டாலினைப் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பின்னர் ஸ்டானிடம் நடத்திய விசாரணை பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் வங்கிகளில் அடகு வைக்கும் நகைகள் குறிப்பிட்ட காலங்களில் திருப்பப்படாமல் ஏலம் போகும் நகைகளுக்கு உரியவரிடம் நிதி உதவி கொடுத்து நகையைத் திருப்பி வேறு வங்கியில் கூடுதல் தொகைக்கு அடமானம் வைத்து லாபம் பார்க்கும் கும்பலிடம் தொடர்பில் இருந்ததாகவும், சம்மந்தப்பட்ட வங்கியின் சேர் மாhக்;கெட் பிரிவில் பணியாற்றுவதாகவும், முத்துப்பேட்டை பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள ஒரு பிரபல தனியார் வங்கியின் அலுவலக ஊழியர்களிடம் நகையைத் திருப்பி தருவதாக கூறிப் பணங்களைப் பெற்றுள்ளதாகவும், அதற்காக நகைத் திருட முயற்சி செய்ததாகவும் தெரிகிறது. மேலும் ஸ்டாலின் பெயரில் அதே குறிப்பிட்ட வங்கியில் பல லட்சம் மதிப்புள்ள பல கிராம் எடைகள் கொண்ட நகைகள் அடமானம் உள்ளதாகவும் இந்த நகைகள் திருட்டு நகைகளாக இருக்குமோ? என்ற போலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் இளைஞன் ஸ்டாலினிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வர துவங்கியதால் போலீசார் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை,
முத்துப்பேட்டை

2 comments:

  1. கமிசனை கட்டவேண்டிய இடத்தில் குற்றவாலி கட்டுவதால் குற்றவாலி தண்டிக்கப் படுவதில்லை, மீண்டும் அதே தொழிலில் இருக்க காரணம் அரசு அதிகாரிகளே!

    ReplyDelete
  2. எத்தனை வயது ஆள் என்று பார்க்கும் போது.நமது தாய் நாட்டின் நிலைமை இப்படி உள்ளதே என்று மனம் ரொம்பவும்
    வேதனை படுகிறது.ஒரு குடூம்பதினை கவனிக்கும் வயது உள்ள நல்ல ஆண் மகனின் நிலைமை ., மனம் எண்ணில்லா .வேதனை படுகிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.