.

Pages

Wednesday, October 29, 2014

செக்கடிமேடு பகுதி குழந்தைகளுக்கு எச்சரிக்கை !

செக்கடிகுளம் தற்போது நிரம்பும் தருவாயில் இருக்கிறது. புனரமைப்பு பணிக்கு பின்பு குளம் நவீனப்படுத்தி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வழக்கத்தை வீட கூடுதலாக குளத்தில் காணப்படுகிறது. இந்நிலையில் புனரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறாததால், குளத்தை ஆர்வத்துடன் பார்வையிட துடிக்கும் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர் சிறுமிகள், மக்தப் மதரஸா செல்லும் சிறுவர்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குளத்தை ஒட்டிய மேட்டில் நடந்து செல்வதோ அல்லது குளத்தை பார்வையிட எட்டி பார்ப்பதையோ தவிர்க்கும்படி அப்பகுதியில் வாழும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அனைவரின் பார்வையில் படும்படி அப்பகுதியில் 'எச்சரிக்கை பலகை' வைக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.