.

Pages

Saturday, October 25, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை அதிரையில் சிறப்பு முகாம் !

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை அதிரையில் சிறப்பு முகாம் அந்தந்த பகுதிகளில் காணப்படும் வாக்கு சாவடிகளில் நடைபெற இருக்கிறது.

2015, ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அந்தந்தப் பகுதிகளில் உள்ள வரையறுக்கப்பட்ட மையத்தில் அக். 15-ம் தேதி முதல் நவ. 10-ம் தேதி வரையிலான நாள்களில் வரையறுக்கப்பட்ட அலுவலரிடம் உரிய படிவத்தைப் பெற்று நிறைவு செய்து அளிக்கலாம்.

மேலும், விடுமுறை நாள்களான ஞாயிற்றுக்கிழமை (அக். 26), நவ. 2-ம் தேதியிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாளை சிறப்புக் கிராம சபை:
இதேபோல, மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக். 26) சிறப்புக் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், 1.1.2015-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற படிவம் 6-ஐ நிறைவு செய்து கொடுக்கலாம். இதற்கு

தொடர்புடைய வாக்கு சாவடி நிலைய அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராமப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு வரையறுக்கப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்று மனு அளிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    தாமதிக்காது வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கிட வேண்டும்.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.