2015, ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அந்தந்தப் பகுதிகளில் உள்ள வரையறுக்கப்பட்ட மையத்தில் அக். 15-ம் தேதி முதல் நவ. 10-ம் தேதி வரையிலான நாள்களில் வரையறுக்கப்பட்ட அலுவலரிடம் உரிய படிவத்தைப் பெற்று நிறைவு செய்து அளிக்கலாம்.
மேலும், விடுமுறை நாள்களான ஞாயிற்றுக்கிழமை (அக். 26), நவ. 2-ம் தேதியிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நாளை சிறப்புக் கிராம சபை:
இதேபோல, மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக். 26) சிறப்புக் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், 1.1.2015-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற படிவம் 6-ஐ நிறைவு செய்து கொடுக்கலாம். இதற்கு
தொடர்புடைய வாக்கு சாவடி நிலைய அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராமப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு வரையறுக்கப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்று மனு அளிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
தாமதிக்காது வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கிட வேண்டும்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com