.

Pages

Friday, October 17, 2014

சிங்கப்பூரில் தமிழ் கவிஞருக்கு உயரிய விருது !

சிங்கப்பூரில் வசிப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவிஞர் கே.டி.எம்.இக்பால் (வயது 74). இவர் அந்த நாட்டின் மிக உயர்ந்த கலாசார விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூர் வானொலி நிலையத்திற்காக கடந்த 1970 முதல் 1980 வரை 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடல்களை எழுதி உள்ளார். மேலும் 7 கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இக்பாலின் சொந்த ஊர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் ஆகும். கலாசார விருது பெற்ற இக்பால் கூறுகையில், “எனக்கு இந்த கலாசார விருது அறிவிக்கப்பட்டிருப்பதை வியக்கத்தக்க மரியாதையாக கருதுகிறேன்.  இந்த விருது கிடைக்கும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” என்றார்.

இந்த விருது 80 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் ரொக்கத்துடன் (சுமார் ரூ.39 லட்சம்) கூடியதாகும். இந்த விருதை அந்த நாட்டின் அதிபர் டோனி டான் கெங் யாம் வழங்கி, இக்பாலை கவுரவிப்பார்.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    கவிஞர் இக்பால் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. //இந்த விருது கிடைக்கும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” என்றார்.//

    தனிமையில் தன் கற்பனைகளை இவ்வுலகின் நலன்களுக்காக தந்தே வாழும் கவிங்கர்கள் தனக்கு விருது கிடைத்திடும் சூழலை சிந்திக்கத் தெரியாதவர்களே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.