.

Pages

Thursday, October 16, 2014

திருவாரூர் - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணியை தொடங்க கோரி முத்துப்பேட்டையில் மறியல் போராட்டம் !

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருவாரூர் - திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை- அதிரை - பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை திட்ட பணியை உடனடியாக தொடங்க கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் முத்துப்பேட்டை அஞ்சல் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழுவின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவி, வீடு கட்ட நிதி உதவி, மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் - உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள் :
சூனா ஈனா ( முத்துப்பேட்டை )







1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    பொதுமக்களுக்கு இடையூறுகள் இல்லாமால் போராட்டம் நடத்துவதே ‎சாலச்சிறந்தது.‎

    வாழ்ந்துக்கள் பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.