.

Pages

Saturday, November 1, 2014

முத்துப்பேட்டையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் !

முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் வாழும் அனைத்து சமுதாய மக்கள் பயன்பாட்டிற்காக முத்துப்பேட்டை பைத்துல்மால் சார்பில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் துணை தலைவர் நெய்னா முஹம்மது தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தொழில் அதிபர் மருத்துவர் யூ. லியாகத் அலி பைத்துல்மால் ஆம்புலன்சை மக்கள் பயன்பாட்டிற்காக அர்பணித்து வைத்தார். இவற்றை பைத்துல்மால் தலைவர் ஜே. இல்முல்லா சனூஃபர் பெற்றுகொண்டார்.

நிகழ்ச்சியின் சிறப்புரையை பைத்துல்மால் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அஷரப் அலி, அஸ் ஷஃபனா பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் பி எம் இப்ராஹீம் காசிமி, எச். முகைதீன் பகரீ ஆகியோர் ஆற்றினார்கள்.

முன்னதாக அறிமுக உரையை பைத்துல்மால் செயலாளர் ஏ. அப்துல் சலீம் நிகழ்த்தினார். வரவேற்புரையை பைத்துல்மால் பொருளாளர் ஏ.மீரா ஹுசைன் வழங்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரையை ஜே. மாலிக் ரஹ்மான் வழங்கினார். நிகழ்ச்சியில் பைத்துல்மால் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆம்புலன்ஸ் சேவை தொடர்புக்கு:
88 83 00 23 33, 88 83 37 77 86, 98 42 67 16 07,

செய்தி மற்றும் படங்கள் : 
சூனா ஈனா, முத்துப்பேட்டை




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.