ஒரு நாட்டின் உயர் பதவி வகித்த ஜனாதியான அப்துல் கலாம், உச்சநீதி மன்ற நீதிபதி பகவதி போன்றோர் புட்டபர்த்தி சாமியார் ஆசிரமம் சென்று சாமியார் அரியணையில் அமர்ந்திருக்கும் போது முக்கிய பிரமுகர்கள் அவர்முன் தரையில் பய பக்தியுடன் அமர்ந்து இருப்பது போன்ற படங்களும், மத்திய- மாநில மந்திரிகள் தேர்தல் நேரத்தில் அவர்களிடம் சென்று ஆசி பெறுவதும் பத்திரிக்கைகள் படம்போட்டுக் காட்டுகின்றன. அந்த பகவான்கள் ஆசிரமங்களில் சில சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள் நடக்கும்போது அப்படிப்பட்ட முக்கியப் பிரமுகர்கள் மக்களிடையே தவறான பேச்சுக்கு ஆளாக வேண்டியுள்ளது. சாதாரண பாமரனும் முக்கிய பிரமுகர்களே அப்படிப் பட்ட பகவான்களை தரிசனம் செய்யும் போது அவர்களிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக எண்ணி அவனும் அந்த சாமியார்களுக்கு அடிமையாகி விடுகிறான். அந்த பகவான்களும் சாமானியர்களிடம் இருப்பதினை எல்லாம் கறந்து படோபடமாக வாழ்வதோடு சில சட்டத்திற்கு புறம்பான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பதினை சில சம்பவங்கள் மூலம் உங்கள் முன் வைக்கலாம் என எண்ணுகிறேன்.
[ 1 ] முன்னாள் பிரதம மந்திரிகள் நரசிம்ம ராவ் மற்றும் அவரது மந்திரி சகாபாக்கள் மற்றும் முன்னால் பிரதமர் சந்திர சேகர் ஆகியோர்களுக்கு மிக நெருக்கமாக சந்திரசாமி என்ற சாமியார் இருந்ததினை பலர் அறிந்து இருப்பீர்கள். 1994 ஆம் ஆண்டு சந்திராசாமி பிறந்த தின விழாவிற்கு நரசிம்ம ராவ் மற்றும் பெரும்பாலான மத்திய மந்திரிகள் அவருடைய ஆசிரமத்தில் ஆஜரானார்கள். அதன் பின்பு அவர் அரசு பவர் புரோக்கராகி ஆயித பேர ஊழலில் ‘அதான் கஸ்ரோகிக்கு’ உதவி செய்ததாகவும், லண்டன் தொழில் அதிபர் ‘பதக்’ இந்தியாவில் தொழில் சம்பந்தமாக சந்திராசாமியினை அணுகி ரூ 6/ கோடி கையூட்டு கொடுத்ததாகவும் அப்போது புகார் கொடுத்து, சந்திராசாமி ஜெயிலுக்குச் சென்றதும், அந்த வழக்கு உச்ச்சமன்றத்திற்கும் சென்றது உங்கள் பலருக்குத் தெரிந்து இருக்கும்.
[ 2 ] மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் என்ற இடத்தில் ஆசிரமம் நடத்தி கற்பழிப்பு, வன்கொடுமை மூலம் 170 பேர்கள் காணாமல் போனது குறித்தக் குற்றச் சாட்டுக்கு ஆளான ‘கிரிப்பால் மகாராஜ்’ என்ற பகவான் அந்த வழக்குகள் சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை என்றுக் கேள்விப்பட்டதும் தலைமறைவானவர் இன்றுவரை என்னவானார் என்று தெரியவில்லை.
[ 3 ] இலங்கை அகதி 'பிரேம்குமார்' என்ற பிரேமானந்தா திருச்சி-புதுக்கோட்டை எல்லை அருகில் உள்ள விராலிமலை ஓரம் ஆசிரம் அமைத்து, ஆதரவு தேடி வந்த சிறுமிகளையும், பெண்களையும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதகவும், அதனைப் பார்த்த ஒரு இளைஞரை கொலை செய்ததாகவும் குற்றம் சுமத்தப் பட்டு இரட்டை ஆயுள் தண்டனை அனுபவிக்கும்போது ஜெயிலில் இறந்தது அனைவரும் அறிந்ததே! அதோடு மட்டுமல்லாது தமிழக பதவியில் இருந்த ஆட்சியாளர்களும் அவரிடம் ஆசி வாங்கியது பத்திரிக்கைகள் படம் போட்டுக் காட்டின.
[ 4 ] 1980-1984 ஆண்டுகளில் பஞ்சாபிற்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோஷமிட்டு, சீக்கியர் பொற்கோவில் வளாகத்தினையும் கோட்டையாக அமைத்து, காலிஸ்தான் என்ற படையினை அமைத்துப் இந்திய ராணுவத்தினையே எதிர்த்துப் போரிட்டு மடிந்த, 'பிந்தரன்வாலா' போன்றோரையும் சில சீக்கிய மக்கள் தியாகி என்று போற்றுகின்றனர். சீக்கிய மத குரு 'லோங்கோவால்' கூட ஆரம்பத்தில் 'பிந்தரன்வாலாவினை' ஒரு 'ஸ்கௌன்றல்' (போக்கிரி) என்றவர் பிற்காலத்தில் அவரே 'பிந்தரன்வாலே ஒரு 'ஞானி' என்று அழைத்தார் என்றால் பாருங்களேன்.
[ 5 ] பஞ்சாப்-ஹரியானா மாநிலங்களில் 'தேரா சச்சா' என்ற அமைப்பினை ஏற்படுத்தி ராமும், ரஹீமும் ஒன்றுதான் என்ற கோசத்தினை எழுப்பி மக்களைக் கவர்ந்து அவர்கள் தங்கள் கொள்கைக்காக வாளும், துப்பாக்கியும் ஏந்தி மற்ற சீக்கியர்களுடன் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சண்டையிட்டது நீங்கள் தொலைக்கட்சியில் பார்த்தும், பத்திரிக்கையில் படித்தும் இருப்பீர்கள். அதன் தலைவர் 'குர்மீத்' பத்திர்க்கையாளர் ராமச்சந்ராவினை கொலை செய்தது சம்பந்தமாக, 'தெகல்கா மற்றும் 'இந்தியா டி.வி.' சேகரித்த ரகசிய தகவல்கள் மூலம் வெளியிட்டது.
[ 6 ] 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பரபரப்பாக பேசப் பட்டவர் 'ராம்பால்' என்ற பகவான். இவர் இன்ஜினியரிங் டிப்ளமா பட்டதாரி. ஹரியானா மாநிலம் நீர்பாசான துறையில் பணியாற்றி முறைகேட்டால் பணி நீக்கம் செய்யப் பட்டவர். ஹிசார் என்ற இடத்தில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு அனுமதியில்லாத ஆசிரமம், 30 உயரம் கொண்ட கோட்டை போன்ற சுற்றுசுவர் எழுப்பி 'ராம்-ரஹீம்' என்ற கோசத்தின் மூலம் பாமரர்களை ஏமாற்றி ஹரியானா அரசுக்கே ஒரு சவாலாக இருந்தது உங்களுக்குத் தெரியும். இவ்வளவிற்கும் அவர் மீது ஒரு கொலைவழக்கு நீதி மன்றத்தில் 2006 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருப்பதும், உயர் நீதி மன்றம் அவரை ஆஜராகும்படி 48 தடவை உத்திரவிட்டும் அவர் ஆஜராகாததால் அவரை ஆஜர் படுத்தும் படி காவலர்களுக்கு கட்டளை இட்டும், அவரது தனிப்பட்ட பாதுகாவலர்கள் அதனை துப்பாக்கி, பெட்ரோல் எறிகுண்டுகள் மூலம் எதிர்கொண்டு, பின்பு ஆறுபேர்கள் இறப்பிற்குப் பின்பு அவரை கைது செய்ய முடிந்தது என்றால் என்ன தைரியம் என்று நீங்கள் கேட்கலாம். சமீபத்தில் அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் அரசியல் பிரபலங்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற அந்த பகவானிடம் ஆசி பெற்றதனால் அவர்கள் காப்பற்றுவார்கள் என்ற எண்ணத்தில் அந்த பகவானின் கமாண்டோக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது.
[ 7 ] புது டெல்லி அருகில் ரிசர்வ் பாரஸ்ட் இடத்தில் ஆக்கிரமித்து ஆசிரம் அமைத்து பக்தர்களைக் கவர்ந்த 72 வயது 'ஆசாராம் பாப்பு' என்ற பகவான் தற்போது கற்பழிப்புக் குற்றச் சாட்டிற்கு ஆளாகி சிறையில் இருக்கிறார். அப்படி ஆக்கிரமித்த இடத்தினை இடிக்கும்படி, 'தேசிய பசுமை ஆணையம்' கட்டளையிட்டும் இன்றும் கூட இடிக்கவில்லை.
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றது என்றால் நலிவடைந்த பிற்பட்ட மக்கள் ஏழ்மையில் வாடும்போது ஏதாவது ஒரு வழிமூலம் ஏழ்மைக்கு விடிவெள்ளி கிடைக்காதா என்ற ஏக்கம் ஒரு புறம் இருந்தாலும், அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகர்கள் அப்படிப் பட்ட பகவான்ங்களிடம் ஆசி பெற வரும்போது நாமும் அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது என்ற எண்ணம் தான் அவர்களிடம் மேலோங்கி உள்ளது என்றால் மிகையாகாது.
21.11.2014 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளார்கள். அதில் 'சில மாதங்களுக்குமுன்பு பிரதமர் நரேந்தர மோடி அவர்கள் மும்பையில் நடந்த விஞ்ஞானிகள் கருத்தரங்கில் பேசும்போது, 'இந்திய நாட்டில் உள்ள விநாயகர் என்ற கணேச பெருமான் தலை தும்பிக்கையுடன் கொண்ட யானை முகம் மனித உருவத்தில் உள்ளதால், அந்தக் காலத்தே மனித உடலில் யானை முகத்தினைப் பொருத்தும் பிளாஸ்டிக் சர்ஜெரி விஞ்ஞானிகள் இருந்ததினால் தான் அதுபோன்ற சாதனை நிகழ்த்த முடிந்திருக்கின்றது' என்று சொன்னதினை சுட்டிக்காட்டி மத நம்பிக்கை வேறு, விஞ்ஞானம் வேறு, அப்படி இருக்கும்போது மத நம்பிக்கையினை விஞ்ஞானிகள் கருத்தரங்கில் பேசியது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்று ஹிந்துப் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது எதனை காட்டுகின்றது என்றால் பதவியில் இருப்பவர்களும், படித்தவர்களும் பாமர மக்களுக்குப் அறிவுப்பூர்வமாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்கள் மோசடி பகவான்களிடம் தஞ்சம் அடைவதினைத் தடுக்க முடியாதல்லவா ?
மோசடி பகவான்கள் ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமில்லை. எல்லா மதத்திலும், ஏன் சில சீர்திர்த்த மார்க்கங்களிலும் இருக்கின்றார்கள். அவர்கள் தான் பில்லி, சூனியம், காற்று, கருப்பு, அதனை விரட்ட தாயத்து, பல நிறங்களில் கயிறுகள், விற்றும், பேய் விரட்டும் தந்திரங்கள் கையாண்டும், களிப்பு எடுக்க வேண்டும், ஆவி விரட்ட வேண்டியும் என்ற புருடா விட்டும், நரபலி கொடுக்கச் சொல்லியும் இளகிய மனங்களை மேலும் பலவீனப் படுத்தி நாலு காசு சம்பாதித்து தங்களை சீமான்களாக மேம்படுத்தி, நம்பிய மக்களை மூடர்களாக்கும் பகவான்கள் நம்மிடையே பலர் உள்ளனர். அவர்கள் முகத்திரையினைக் கிழிப்பது ஒவ்வொரு படித்த, பகுத்தறிவாளர் கடமையல்லவா ?
டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி / எழுத்தாளர் / சமூக ஆர்வலர்
முகத்திரையை கிழித்த விதம் அருமை !
ReplyDeleteபகுத்தறிவாளர்கள் சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் அறியவேண்டிய அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ஜனாப் முகம்மது அலி ஐ பி எஸ் அவர்களே !
ReplyDeleteஅறியாமை மக்களால் பகவான் என்றும் சாமியார் என்றும் வணங்கப்பட்ட போலிகள் ஒவ்வொருவரையும் ஆதாரத்துடன் புட்டுப்புட்டு வைத்து உலகறியச் செய்துள்ளீர்கள்.
இதில் வேதனைப்படக் கூடிய விஷயம் என்னவென்றால் இவர்களின் வளர்ச்சிக்கு அரசியல் தலைவர்களே முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநடந்தது, நடந்து கொண்டிருப்பது, நடக்கப்போவது. இப்படி மூன்று பங்கு வைத்து இதைப் படித்தால் மூன்றுக்குமே பொருந்தும் வகையில் இந்த ஆக்கம் அமைந்துள்ளது.
மக்கள்தான் புரியாதர்வர்கள் என்று நினைத்தால், மக்களை ஆளுவதற்கு நாங்கள் தகுதியுள்ள தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு புரியாதவர்களாக இருக்கின்றார்கள் என்று நினைக்கும்போது இவர்கள் எந்த தகுதியின் அடைப்படையில் ஆளுவதற்கு ஆட்சிக்கு வந்தார்கள் என்று நினைத்தால் வேதனையாக இருக்கின்றது.
இவர்களெல்லாம் திருந்துவார்கால் என்றால் அதுக்கு சாத்திக்கூறுகள் ஏதும் தென்படவில்லை என்றே சொல்ல வருது.
படிச்சவன் படிக்காதவன் மூடன் அறிவுடையோன் எல்லோரும் இப்படித்தான் இருக்கின்றாங்கள்.
சரியான வழியில் திருந்தாத வரை, சரியான வழிகள் அனைத்தும் சரிந்துகொண்டே போகும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
வசதியை பெருக்க வழிகள் தெரிந்து வைத்தமக்களுக்கு அமைதி நிம்மதி அடைய வழிதெரியாத பரிதாபமான நிலையைதான் இந்த போலிகள் தனக்கு சாதகமாக பொருள்ளை கறப்பதற்க்கு தன் வலையில் சிக்கவைத்து விடுகின்றனர், இதில் அபுல்கலாம்மோ, நரசிம்மரைவ்வோ விதிவிலக்கல்ல.
ReplyDeleteபட்டியலின் எண்ணிக்கையில் இன்னும் இரு முக்கிய சம்பவங்கள் விடுபட்டு இருக்கின்றன.
ReplyDeleteஒன்று இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையாளராக இருந்த திரு. டி. என். சேஷன் விளக்குமாற்றை எடுத்து காஞ்சி சங்கர மடத்தை கூட்டிப் பெருக்கி தூசி தட்டி குப்பை அள்ளிப் போட்டது. .
இரண்டு இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்த வெங்கட்ராமன் அவர்கள் , தனது தண்டத்தை காஞ்சியில் போட்டுவிட்டு எங்கோ தலைமறைவாகப்போன சங்கராச்சாரியாரை தேடிக் கண்டுபிடித்து தலைக்காவிரியிலிருந்து அவரை சமாதானப்படுத்தி கூட்டி வந்தது.
கட்டுரை ஆசிரியரைப் பாராட்டுகிறோம்.
இதுவரை சிக்கியவர்களைக் காட்டிலும் இன்னும் எத்தனை போலிகள் நாட்டில் அக்கிரமங்கள் செய்துகொண்டு இருக்கிறார்களோ.
ReplyDeleteநாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஒவ்வொரு நாளும் வெளிவரும் போலிகள் குறித்த அதிர்ச்சிகரமான செய்திகள் நாட்டை மக்களால் தேர்ந்தெடுத்த அரசுதான் ஆள்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
ஆக்கப்பூர்வமான தலையங்கம்
தற்போது, 'கம்பி எண்ணி' வரும் சாமியார் ராம்பாலுக்கு, அவரின் ஆசிரமத்தில் பால் குளியல் நடந்ததாகவும், அந்த பாலில் பக்தர்களுக்கு பாயாசம் தயாரித்து வழங்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது,
ReplyDeleteகுளிக்கும் போது ஒரு மனிதனுக்கு உட்சா போகணும். இந்த சாமியாருக்கு பாலால் குளியல் செய்யும் போது உட்சா போய் இருந்தால், அந்த பாயசம் எப்படி இருந்திருக்கும். அதை குடிதவர்களை நினக்கும் போது....,அடப் பாவமே!
சாமியார்கள் என்றாலே இது போல் மூட நம்பிக்கையையும் கடைபிடித்துக்கொண்டும் சமூக விரோத செயல்களை செய்து கொண்டும் இருப்பவர்கள் தானே! பார்க்கும்போது இப்படி தானே தோணுது ,
அருமையான விழிப்புணர்வு தக்க சமயத்தில்.... பாராட்டுக்கள்
படிச்சவன் படிக்காதவன் மூடன் அறிவுடையோன் எல்லோரும் இப்படித்தான் இருக்கின்றாங்கள்.
ReplyDeleteசரியான வழியில் திருந்தாத வரை, சரியான வழிகள் அனைத்தும் சரிந்துகொண்டே போகும் என்பதில் சற்றும் ஐயமில்லை I copy
படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடெல்லாம் மத நம்பிக்கையில் அடிபணிந்தே போகின்றது. காரணம் இவர்கள் படித்தது படிக்காதது என்பதெல்லாம், வாழ்வாதாரம் சீராக நடக்க சம்பாதிக்கும் வழிகளே. ஒவ்வொரு மனிதரும் அவரவர் நம்பிக்கைக் கொண்ட மதத்தில் உள்ள உண்மைகளை தெளிவாக விளங்க முயற்சிப்பதில்லை. அன்றாட அனுஸ்ட்டானங்களை செய்துவிட்டால் போதும் என்று பிழைப்பைப் பற்றி சிந்திக்க சென்றுவிடுகின்றனர்.
ReplyDeleteமனிதன் எப்படியும் வாழலாம் என்றால் அதில் அமைதிக் கிடைக்காமல் பின் அழிவை நாடியே அவன் வாழிக்கைப் போனது, போகும். மனிதன் அமைதியாக தானும் பிற மனிதனும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற வாழ்வுமுறை சிறந்தது. அத்தகைய வழிகளைக் கண்டறிய தன்னை முழுமையாக அர்பணித்து மறைந்திருக்கும் சில உண்மைகளை அன்பும் பண்பும் மிக்க மகா உன்னதமானவர்கள் அறிந்துத் தெளிந்து மனிதருக்கு வழிகாட்டினர். அவர்களை பின்பற்றுபவர்களைக் கொண்டு ஒரு பெயரிட்டு அது இடம், காலம் இவைகளால் பிரிக்கப்பட்டு பல மாதங்களாக நிலவுகின்றது. சில மகா உன்னதமாணவர்கள் இதன் உண்மைகள் எல்லாம் ஒன்றின் மையத்திலிருந்தே என்பதும் விளக்கம் பெற்று அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.
இவ்வுண்மைகள் எல்லாம் எல்லா நிலையில் உள்ள மனிதர்களால் சொன்னாலும் புரியமுடியாததும் ஆனால் பரிபூரண சாத்தியமானதும் ஆகும். ஆர்வமும் புத்தி அறிவு தெளிவான நல்லவர்கள் அவர்களால் அறிந்துக்கொள்ளமுடியும்.. அவ்வுண்மை தெரிந்தவர்களிடம் அது பல ஆற்றலாக வெளிப்படும் சர்வ சாதாரணமாக. அது பண்படாத மக்களுக்கு ஆச்சிரியத்தக் கொடுக்கும். அவரகளும் மக்களை அறியாத மூடர்களாக வாழக்கூடாது என்பதற்கிணங்க அறிவுகளை பல நிலைகளில் சொல்லித்தான் சென்றனர், சொல்கின்றனர். புரிகின்ற மனிதர்கள் அவரவர் அறிவு நிலைக்கேற்ப பலவாறு புரிந்து பேதத்தினைத்தான் கண்டனர் காண்கின்றனர்.
அறிவுகளைத் தேடி இவ்வாறு சாமியார்கள் பக்கம் போவது அன்று முதல் இன்றுவரை நடப்பது தேடலின் விளைவாகவே. இதில் புரிந்தோம் என்ற அரைகுறைகளிடம் மக்கள் மாட்டிக்கொள்ளும் பொது இதுவே தவறு என்று சொல்லும் நிலையும் ஏற்படுவது தவிர்க்கமுடியாதுதான்.
ஆனாலும் இது பல பக்கம் தொடரும் என்பதால் "தன்னை அறிந்தவனே தன் தலைவனை அறிவான்" என்ற ஞானிகளின் புனித வார்த்தையோடு முடிப்பதே நன்கு எனக் கருதுகிறேன்.
சமூக அக்கறை நிறைந்த இக்கட்டுரைப் போன்ற எழுத்தாலளர்கள் இவ்வாறு போன்ற உண்மைகளை எழுதுகின்றர்கள். அவர்கள் பனி சிறக்க நல்ல மனங்கள் என்றுமே விரும்பும்.