.

Pages

Monday, November 24, 2014

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணியை உடன் துவங்க வேண்டும் ! காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மாணம்!!

முத்துப்பேட்டையில் வட்டார, நகர காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் கொய்யா மகாலில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வைரவநாதன் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் முகம்மது மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பையன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னால் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் பேசுகையில்: 
காங்கிரஸ் கட்சி யாராலும் அழிக்க முடியாத கட்சியாகும். அதே போல் இப்பொழுது இருக்கும் தொண்டர்கள் பதவிக்காகவும், பணத்துக்காகவும் ஆசை படுகிற தொண்டர்கள் அல்ல. தேசத்துக்காகவும் இந்த மக்களுக்காகவும் உழைக்கின்ற தொண்டர்கள் தான் நீங்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேரடியாக கட்சி பதவியையும், அமைச்சர் பதவியையும் கொடுத்ததன் விளைவுதான் அதன் அருமை தெரியாமல் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு கட்சியை விட்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் போனதால் நமக்கு லாபம் தான் நஷ்டம் கிடையாது என்றார். இதே மாவட்ட துணைத் தலைவர் நாச்சிக்குளம் தாகிர், மாவட்ட பொது செயலாளர்கள் வீரமணி, பகுருதீன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் கருணாநிதி, தலைமை கழகப் பேச்சாளர்கள் பட்டுக்கோட்டை ரஹீம், தில்லை நடராஜன், சங்கு ராஜகோபால், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, மாணவர் காங்கிரஸ் தலைவர் அன்பழகன் வட்டார வர்த்தகக்காங்கிரஸ் தலைவர் வடுகநாதன், ஆகியோர் பேசினார்கள். இதில் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணியை உடனே துவங்க வேண்டும். முத்துப்பேட்டை தனித் தாலுக்காவாக அறிவிக்கப்பட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும். முத்துப்பேட்டைக்கு துணை மின்நிலையம் அமைக்க நிதி ஒதிக்கீடு செய்யப்பட்ட பணியை உடனே துவங்க வேண்டும். வருகிற 10-ந் தேதி சோனியா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது கட்சியின் வளர்ச்சிக்கு வட்டார, நகரம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் நகர நிர்வாகிகள் ஜெகபர் அலி, பேட்டை மஸ்தான், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாச்சிக்குளம் முகைதீன் பிச்சை, பேரூராட்சி கவுன்சிலர் மெட்ரோ மாலிக், சிறுபான்மை பிரிவு நிர்வாகி தஸ்தகீர், வட்டார நிர்வாகிகள் உதய தங்க ராசு, எக்கல் இளவரசன், உட்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உப்பூர் வீரசேகரன் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.