.

Pages

Friday, November 28, 2014

தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 393 பேர் பலி !

தஞ்சாவூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில், 393 பேர் உயிரிழந்துள்ளனர்.தஞ்சையில், சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் சுப்பையன் தலைமையில் நடந்தது. எஸ்.பி., தர்மராஜன் உட்பட போலீஸ் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தஞ்சை மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறியும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுவதால் தான், விபத்துகள் அதிகரிக்கிறது. இருசக்கர வாகனங்கள் தான் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. கடந்த ஆண்டு, மாவட்டம் முழுவதும், 2,273 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், 445 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு நவம்பர், 25ம் தேதி முடிய, 1,877 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், 393 பேர் உயிரிழந்திருப்பது, ஆய்வில் தெரியவந்தது.சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்ள வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து, வாகன ஓட்டிகள் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் செல்வதை தவிர்க்க வேண்டும். குடிபோதையிலும், ஃபோன் பேசியவாறும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீஸார் அறிவுரை வழங்கினர். மேலும், போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, அபராதம் விதிக்கப்படும், என போலீஸார் எச்சரித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.