.

Pages

Wednesday, November 19, 2014

அதிரையில் காஸ் விநியோகத்திற்கு கூடுதல் வசூல் ! மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு !

அரசு நிறுவனமாகிய இன்டேன் மூலம் அதிரையில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்த சில வாரங்களில் ஊழியர் மூலம் விநியோகிக்கப்படும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் பில் தொகையை வீட கூடுதலாக வசூல் செய்வதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவியது. இதுகுறித்து அவ்வப்போது புகார்கள் தெரிவித்து வருவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் நமதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அதிரை பேரூராட்சியின் கடற்கரைத்தெரு பகுதியில் 8வது வார்டு உறுப்பினர் 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் அவர்கள், இவர் வசிக்கும் பகுதியின் பொதுமக்களின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.

கடந்த வருடம் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தனது கோரிக்கையை புகாராக அனுப்பி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அப்போது விசாரணையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் நம்மிடம் கூறியதாவது...
'நமது ஊரில் விநியோகிக்கப்படும் காஸ் சிலிண்டருக்கு பில் தொகையை வீட கூடுதலாக ₹ 32 வசூல் செய்யபடுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக பொதுமக்களிடம் கையொப்பம் மும்முரமாக பெறப்பட்டு வருகிறது.

இதுபோல் அதிரையின் ஏனைய வார்டு கவுன்சிலர்களும் தங்கள் பகுதி பொதுமக்களிடம் புகார்களை பெற்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தொடர்ந்து நடந்துவரும் முறைகேடுகளை தடுக்க முடியும்' என்றார்.

புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

4 comments:

  1. அதிரை இன்டேன் கேஸ் customer care மிக மிக அழச்சியபடுத்துவதையும் கண்டனம்மாக பதிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. எத்துணை கவுன்சிலர்கள் நெட் தொடர்பில் தகவல் பெறுவார்கள் என்று நாம்யூகிக்க முடியவில்லை எனவே டெலிபோன் தொடர்புமூலம் தகவல் கொடுத்து இது போன்ற புகார் மனு அளிக்க அறிவுறுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. நம்மை ஏமாற்றாதவர்கள் யார்? ஒரு பிச்சைக்காரன் கை நீட்டினால் 'அட்வைஸ்' செய்யத் தொடங்கி விடுகிறோம். 'போப்பா... போய் உழைச்சுப் பிழைக்கிற வழியப்பாரு' என்று..!

    அதே ஒரு பாட்டி பழம் விற்றால் அந்த பாட்டியிடம் 'போட்டுக் கொடு...' என்று நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் ஒரு லாவணியே நடத்துகிறோம் ஆனால் இங்கோ கேட்டதைக் கொடுத்துவிட்டு போய்க் கொண்டே இருக்கிறோம்! கேட்பதற்கு ஆள் இல்லையென்று நினைத்து விட்டார்கள் போலும்! கேஷ் காரங்க இப்படி. சமீபத்தில் பாலில் கலப்படம் செய்து பெரிய கொள்ளை நடந்ததது மக்களுக்கு தெரியும் ஒரு தனிப்பட்ட மனிதன் சத்தியமா செய்யமுடியாது ஒரு பெரிய நெட்வொர்க், ஆளும் கட்சிக்கு தொடர்பு உள்ளது என்பதும் தெரியும் , யாராவது கண்டித்தோமா? பாலை வாங்காமல் இருந்தாலே ஆடிப்போய்விடுவார்கள், செய்தோமா ?

    கேட்பதை கொடுப்பதால் தலைக்கனம் ஏறிப்போச்சு!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.