.

Pages

Thursday, November 20, 2014

அதிரையில் திருட்டை தடுக்க வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த காவல்துறை அறிவுறுத்தல் !

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. தர்மராஜன் அவர்களின் உத்தரவின் பேரில், அதிரையில் உள்ள நகைக்கடைகள், அடகுக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இன்று அதிரை காவல்நிலையத்தில் ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் 'கடைகளில் சிசிடிவி கேமராக்களை பார்வையில் படும்படி உள்பக்கம் மற்றும் வெளிபக்கங்களில் பொருத்த வேண்டும். பாதுகாப்பு பெட்டகங்களை நிறுவ வேண்டும். பூட்டு, ஜன்னல்களை திருடர்கள் உடைத்தால் ஒலி எழுப்பும் பாதுகாப்பு அலாரத்தை நிறுவ வேண்டும். திருடர்கள் கதவை திறந்தால் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பும் வசதிகளை செய்யவேண்டும். இரவுக்காவலர்களை நியமிக்க வேண்டும். கடைகளின் முன்பாக இரவு நேரங்களில் ஒளி தரும் விளக்குகளை எரிய விடவேண்டும். நகைக்கடைகள் பாதுகாப்பான தார்சு கட்டிடங்களில் மட்டுமே செயல்படவேண்டும். சந்தக நபர்களின் நடமாட்டம் குறித்து காவல்துறைக்கு உடனடி தகவல் தெரிவிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. மேலும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்ட நெறிமுறைகளை பின்பற்ற நிறுவன உரிமையாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் நகைக்கடை, அடகுக்கடை, வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டுள்ளதா ? என காவல்துறையின் சார்பில் கண்காணிக்கப்படும் என்றும் இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறிய நேரிட்டால் நிறுவன உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் அதிரை நகர நகைக்கடை, அடகுக்கடை, பெட்ரோல் பங்க் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை தான் இருந்தும் சில இடங்களில் CCTV பொருத்திய முக்கிய வணிகவலாங்களில் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துவிட்டு தளமரைவாகிவிடுகின்றனர், அப்படி பிடிப்பட்டாலும் அவன் மீண்டும் அதே தொழில் தான் செய்கிறான் எனவே spl deal இரண்டு பேருக்கும் உண்டு என மக்கள் நினைக்கிறார்கள் அதனால காவல் நிலையத்திலும் CCTV பொருத்த வேண்டும் என்பது மக்களின் நீடநாள் கோரிக்கை- செய்வார்களா...?

    சொல்லிப் பாருங்க, யோவ்! போய் வேலையா பாருயான்னு சவுண்டு விடுவாங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.