.

Pages

Wednesday, November 26, 2014

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி !

பேராவூரணி கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மு.கருணாநிதி வரவேற்றார். பெற்றோர்- ஆசிரியர் கழகத்தலைவர் லயன்ஸ் எஸ்.கே.ராமமூர்த்தி கண்காட்சியை துவக்கி வைத்தார்.
          
அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவியர், பெற்றோர்கள், கிராம கல்விக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கண்காட்சியை கண்டுகளித்தனர்.
     
நீர், காற்றாலை, மின்சாரம், மாற்று எரிபொருள் சக்தி, குறைந்த விலையில் நிறைந்த பலனளிக்கும் சத்துணவுகள், இயற்கை உணவுகள், மருத்துவம், சிறுதானிய உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அரங்குகளை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். சிறந்த முறையில் கண்காட்சி அமைத்திருந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
     
கண்காட்சிகளுக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் எம்.காமாட்சி சுந்தரம், சி.மனோன்மணி ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
எஸ்.ஜகுபர்அலி, பேராவூரணி.

1 comment:

  1. மாணவ, மாணவியரின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், அறிவியல் கண்காட்சி நடத்தி அவர்களின் திறமை மேன்படும் வகையில் மாவட்ட, மாநில, தென்னிதியளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் இடம்பெற செய்யவேண்டும்.

    அடுத்தாண்டு 2015 ம் ஆண்டுக்கான, ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம்பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.