இதில் கலந்துகொள்வதற்காக நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள் ஏ. முஹம்மது மொய்தீன், எம். முஹம்மது மொய்தீன், என். முஹம்மது மொய்தீன், சொக்கலிங்கம், என். ஜெயவீரன், மேஜர் எஸ்பி கணபதி, எஸ். ராஜா முஹம்மது, உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம், எஸ். அப்பாஸ், கே. செய்யது அஹ்மது கபீர், பிரேம் நவாஸ், சேகர், ரமேஷ், சேக் அப்துல் காதர், பழனிவேல், பேராசிரியை பரிதா பேகம், ஜெய்னபா பேகம், சுமதி மற்றும் அலுவலக பணியாளர்கள் ரவி, விஜயகுமார், ஹாரூன் ஆகியோர் சண்டிகர் சென்றனர். இதில் கிடைத்த இடைப்பட்ட கால அவகாசத்தில் அருகில் உள்ள சுற்றுலா தலமாகிய குலுமணாலி, பஞ்சாப் பல்கலைகழகம், முகாலி, ஆக்ரா, சிம்லா, அமிர்தசரஸ், இந்தியா - பாகிஸ்தான் வாகா எல்லை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கண்டு ரசித்தனர்.
இதில் குலுமணாலி கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மணாலி சுற்றுலாத்தலம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்திலேயே மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தல சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. குலு மாவட்டத்தின் ஒரு அங்கமாக உள்ள இந்த மணாலி மாநிலத் தலைநகரான சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு மலைப்பாதை ஸ்தலத்திலிருந்து மயிர்க்கூச்செரிய வைக்கும் எழில் காட்சிகளையும், பனிச்சிகரங்களையும், மலைகளையும் பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அழகில் அதிரை அறிவுகள் மின்ன
ReplyDeleteநிழலில் நினைவில் நெகிழ்ந்தோம் - பழகும்
வழக்கில் அமைதி வகுத்தே நிலவும்
அழகே அரங்கிலே ஆற்று
ஆஹா என்ன ஒரு அற்புதம், வாழ்த்துகள்...
ReplyDeleteநூலக புத்தகங்கள் பனியில் விளையாடுகின்றார்களே !