.

Pages

Monday, November 17, 2014

மழை நின்றதை தொடர்ந்து உற்சாகத்துடன் கடலுக்கு செல்லும் அதிரை மீனவர்கள் !

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் அதிரை கடலோரப்பகுதிகளில் சீற்றம் அதிகரித்து வந்தது. காற்றும் பலமாக வீசியதுடன் பலத்த மழையும் தொடர்ந்து பெய்தது. இதனால் அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் உள்ளிட்ட  மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்கு செல்லவில்லை.

இந்த பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை தற்போது நின்று போனதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் கடற்கரை பகுதி மீண்டும் பரபரப்பானது. மீனவர்கள் சில நாள்களுக்கு பின் மீன்பிடிக்கச் செல்வதால் கடலில் அதிக மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.