.

Pages

Thursday, November 27, 2014

மதம் கடந்த மனிதநேயம் ! அய்யம்பேட்டை மருத்துவரின் இறுதி நிகழ்ச்சியில் கூடிய இஸ்லாமியர்கள் !! [ படங்கள் இணைப்பு ]

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் பல்லாண்டு காலம் மருத்துவராக சேவையாற்றி வந்தவர் டாக்டர் கோட்டைச்சாமி(60)  இராமேஸ்வரம் சாலையில் நடந்த‌ விபத்தில் உயிரழந்தார். இவரின் திடீர் மறைவு இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான‌ மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அவரின் இறுதிச்சடங்கில் மரியாதை செய்ய பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடி, குறிப்பாக‌ இஸ்லாமியர்கள் மட்டுமே தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமாக கூடி தங்கள் இரங்கலை தெரிவித்து கதறி அழுதார்கள் .  மருத்துவர்  ஒருவரின் மறைவுக்கு  இத்தனை பெரிய கூட்டம் கூடியது இதுவே முதல் முறை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதற்கெல்லாம் ஆதார சுருதி அவர் அப்பகுதி மக்கள் மேல் காட்டிய கருணை. மக்களுக்கு அவர் காட்டிய அன்பு. மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்காக சேவையாகவே செய்து பல உயிர்களை காத்து நின்றது தான்.

இது குறித்து அப்பகுதிய சேர்ந்த முஹைதீன் பாட்சா, மற்றும் பாட்ஷா கனி உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்தோர் கூறியதாவது, 
வாழும் போது எப்படி அன்பை மட்டுமே பிரதானமாய் கொண்டு மனிதர்களை கருணையால் சூழ்ந்து சிகிச்சை செய்து சாதித்தாரோ, அது போலவே அவர் இறந்த போதும் மதமாச்சர்யங்களை தவிடு பொடியாக்கி மனித நேயத்தை, மதம் கடந்த பெரும் நேசத்தை அவர் இறந்து போய்விட்டலும் அவரது பூத உடல் நிரூபித்துக் காட்டிவிட்டது.

இத்தனை மக்கள் ஒன்று கூடி திரண்டது தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது என்றால் இதில் மருத்துவர் ஐயா அவர்கள் மக்களின் மீது காட்டிய மெய்யன்பும், மக்கள் அனைவரும் மருத்துவர் ஐயா அவர்களிடம் காட்டிய பேரன்பு மட்டுமே காரணம். ஒரு அரசியல் வாதிக்கோ, ஒரு நடிகருக்கோ கூடிடும் கூட்டத்தில் சுயநலம் கலந்திருக்கும் ஆனால் இங்கு கூடிய கூட்டத்திற்கு அன்பும், ஆற்றாமையும், மனிதநேயரை பிரிந்துவிட்டோம் என்ற பிரிவுத்துயரும் மட்டுமே தான் காரணமாக உண்டு என்றனர்.

நன்றி: தினகரன்

8 comments:

  1. ஒவ்வொருவரும் இதைபோல நடந்து கொண்டால் எந்த மத சண்டையும் வராது ....ஆனா அரசியல் பண்ண முடியாது

    ReplyDelete
  2. இப்போதாவது பி ஜே பி மற்றும் ஆர் எஸ் எஸ் சகோதரர்கள் தெரிந்து கொள்ளட்டும் ....புரிந்துகொள்ளட்டும் ..மனிதநேயம் +மாறாத அன்பு + படைப்பினங்கள் மீது கருணை இப்படி அடுக்கி கொண்டே போகலாம்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

    சிறந்த மனிதாபிமானி, இவரின் சேவைகள் அளப்பரியது என்பதால் மக்கள் தங்கள் அன்பை அவரின் இறுதி பயணத்தில் காட்டி விட்டார்கள், அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் - பிராத்திப்போம்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

    சிறந்த மனிதாபிமானி, இவரின் சேவைகள் அளப்பரியது என்பதால் மக்கள் தங்கள் அன்பை அவரின் இறுதி பயணத்தில் காட்டி விட்டார்கள், அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் - பிராத்திப்போம்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.

    ReplyDelete
  6. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

    ஆர்வலர் புண்கணிுர் புுசல் தரும் போதினிலே.

    ReplyDelete
  7. மதத்தைத் தாண்டி மனிதநேயம் இங்கு நிலைநாட்டப் பட்டு இருக்கிறது.என்று தான் சொல்லவேண்டும். இப்படி அனைத்து மதத்தவரும் மனிதநேயத்துடன் நடந்து கொண்டால் நாட்டு மக்கள் மகிழ்வுடன் வாழலாம்.

    அன்னாரை. இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரியப் படுத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  8. ஏக இறைவன் இவரின் தவறுகளை மன்னிப்பானாக .

    மனிதர்களே மதிக்க வேண்டியது மதங்களை அல்ல ,
    மனித நேயங்களை என்று அருமையாக வாழ்ந்து காட்டியுள்ளார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.