நகைக்கடை, அடகுக்கடைகளில் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பேராவூரணி நகரில் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை, உதவி ஆய்வாளர் ஏகாம்பரம்,பெருமாள், ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் நகைக்கடை, மற்றும் அடகுக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
'கடைகளில் சிசிடிவி கேமராக்களை மறைவான இடத்தில் பொருத்த வேண்டும். பாதுகாப்பு பெட்டகங்களை நிறுவ வேண்டும். பூட்டு, ஜன்னல்களை திருடர்கள் உடைத்தால் ஒலி எழுப்பும் பாதுகாப்பு அலாரத்தை நிறுவ வேண்டும். திருடர்கள் கதவை திறந்தால் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பும் வசதிகளை செய்யவேண்டும். இரவுக்காவலர்களை நியமிக்க வேண்டும். கடைகளின் முன்பாக இரவு நேரங்களில் ஒளி தரும் விளக்குகளை எரிய விடவேண்டும். நகைக்கடைகள் பாதுகாப்பான தார்சு கட்டிடங்களில் மட்டுமே செயல்படவேண்டும்' என வலியுறுத்தினர். இதுசம்பந்தமாக நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் சிவகாமி ஜூவல்லர்ஸ் சாமியப்பனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
செய்தி மற்றும் படம்:
எஸ். ஜகுபர்அலி,
பேராவூரணி
நல்ல ஆலோசனை சீக்கிரமா செயல்படுதிடுங்க, யாரயும் நம்பமுடியாதுங்க போலிசே திருடனாக மாறிய சம்பவம் உண்டு, அவ்வளவுதான்!
ReplyDelete