.

Pages

Monday, November 17, 2014

நகைக்கடை, அடகுக்கடைகளில் காவல்துறை ஆய்வு !

பேராவூரணி நகர கடைவீதியில் உள்ள நகைக்கடைகள், அடகுக்கடைகள் ஆகியவற்றை காவல்துறையினர் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
         
நகைக்கடை, அடகுக்கடைகளில் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பேராவூரணி நகரில் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை, உதவி ஆய்வாளர் ஏகாம்பரம்,பெருமாள், ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் நகைக்கடை, மற்றும் அடகுக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

'கடைகளில் சிசிடிவி கேமராக்களை மறைவான இடத்தில் பொருத்த வேண்டும். பாதுகாப்பு பெட்டகங்களை நிறுவ வேண்டும். பூட்டு, ஜன்னல்களை திருடர்கள் உடைத்தால் ஒலி எழுப்பும் பாதுகாப்பு அலாரத்தை நிறுவ வேண்டும். திருடர்கள் கதவை திறந்தால் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பும் வசதிகளை செய்யவேண்டும். இரவுக்காவலர்களை நியமிக்க வேண்டும். கடைகளின் முன்பாக இரவு நேரங்களில் ஒளி தரும் விளக்குகளை எரிய விடவேண்டும். நகைக்கடைகள் பாதுகாப்பான தார்சு கட்டிடங்களில் மட்டுமே செயல்படவேண்டும்' என வலியுறுத்தினர். இதுசம்பந்தமாக நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் சிவகாமி ஜூவல்லர்ஸ் சாமியப்பனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

செய்தி மற்றும் படம்: 
எஸ். ஜகுபர்அலி, 
பேராவூரணி

1 comment:

  1. நல்ல ஆலோசனை சீக்கிரமா செயல்படுதிடுங்க, யாரயும் நம்பமுடியாதுங்க போலிசே திருடனாக மாறிய சம்பவம் உண்டு, அவ்வளவுதான்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.