.

Pages

Friday, November 28, 2014

திருச்சி கூட்டத்தில் வாசன் அதிரை ஆதரவாளர்கள் பங்கேற்பு !

காங்கிரசில் இருந்து பிரிந்த ஜி.கே. வாசன் அணியின் முதல் பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை,ஜி.கார்னர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜி.கே.வாசனின் புதிய கட்சிப் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சின்னமாக சைக்கிள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாசன் ஆதரவாளர்கள் அதிரையிலிருந்து 12 வேன்கள் மற்றும் ஆதரவாளர்களின் சொந்த வாகனங்களில் திருச்சி புறப்பட்டு சென்றனர்.

1 comment:

  1. காமராஜர் ஆட்சி, வளமான தமிழகம் பேசற நீங்க, அப்பறம் எதுக்கு உங்க கட்சியை காங்கிரஸ்சோட மொதல்ல இனைச்சீங்க ? அது எப்படி, காங்கிரஸ் இனிமே தலை எடுக்காதுன்னு தெரிஞ்சி தான, நீங்க மற்றும் உங்க மேற்படி தலைகள் எல்லாம் MP தேர்தல்ல போட்டி போடாம ஒதுங்கினீங்க ? காங்கிரஸ் நல்ல நிலைமைல இருந்திருந்தா, தொடர்ந்து அங்க தான எல்லாரும் ஒட்டிகிட்டு இருந்திருப்பீங்க ? மத்தியில் பதவி, அதிகாரம், நெருக்கம் இருக்கும்போதே, தமிழகத்துக்காக ஒன்னும் செய்யாத நீங்க மற்றும் உங்க மேற்பட்ட கோஷ்டிகள், இனிமேல தானா செய்யப் போறீங்க ? கட்சி ஆரம்பிக்கற எல்லாருமே மொதல்ல விடற ஆரவாரமான உதார் தான் நீங்களும் விடறீங்க.

    அது என்ன, உங்க கட்சி எல்லாவற்றிற்கும் போராடும், முயற்சி செய்யும்னு பொத்தாம் பொதுவா ? எங்கே தைரியம் இருந்தா, எல்லாவற்றையும் நிறைவேத்தி காட்டுவோம்னு, சவால் விட்டு சொல்லுங்க பாக்கலாம் ? இனிமே தமிழ்நாட்டுல, சாராயம், பிரியாணி உற்பத்தி அதிகரிக்கும். அதாங்க, ஊர்வலம், மறியல் இதெல்லாம் செய்ய உங்க கூட வர்றவங்களுக்கு தரணுமே ?

    கட்சி பெயரை தமாஷ் மாநில காங்கிரஸ் ன்னு வைத்து இருந்தா பொருத்தமா இருக்கும்... சின்னமா வெத்தலை பொட்டிய வெச்சு இருக்கலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.