முத்துப்பேட்டையில் த.மு.மு.க ஆலோசனை கூட்டம் நகர தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது முன்னிலை வகித்தார். இதில் பாபர் மசூதி நிலைத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 1 முதல் 5-ம் தேதி வரையும் ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புவது மற்றும் இடிக்கப்பட்ட பாபர் மசூதி நிலைத்தை மீட்க கோரி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கருப்பு சட்டை அணிந்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முத்துப்பேட்டையில் இருந்து 250க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து எதிர்வரும் டிசம்பர் 2-ம் தேதி அன்று முத்துப்பேட்டையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் முகம்மது அலீம், மாவட்ட மாணவரணி செயலாளர் முகம்மது பைசல், நகர செயலாளர் சீமான், நகர துணை தலைவர் யாசீன், நகர பொருளாளர் தாவுதுஷா, நகர துணை செயலாளர் நிசார், மருத்துவ அணிசெயலாளர் முகம்மது நபீல் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
செய்தி:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.