அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். மிகவும் பழமை வாய்ந்த இவை வரலாற்று சிறப்பு மிக்கது. அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீராடி மகிழ்ந்து வர உதவியாக இருந்துள்ளது. மேலும் ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இந்தப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட இந்த குளத்தால் இந்த பகுதியின் நீர்மட்டம் கீழே இறங்கியதோடு மட்டுமல்லாமல் இக்குளத்தில் நீராடும் பலருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் குளத்தை சுற்றி அமைந்துள்ள பகுதியின் மழை நீர் குளத்திற்குள் வர துவங்கியது. தற்போது குளத்தில் முழங்கால் அளவில் காணப்படும் தண்ணீரில் அதிரையர்கள் தினமும் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர்.
குளத்திற்கு நீரை கொண்டுவர இரண்டு வழிமுறைகள் இருந்தும், அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும், பாரபட்சமில்லாமல் இதற்கான முயற்சியில் இவர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட இந்த குளத்தால் இந்த பகுதியின் நீர்மட்டம் கீழே இறங்கியதோடு மட்டுமல்லாமல் இக்குளத்தில் நீராடும் பலருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் குளத்தை சுற்றி அமைந்துள்ள பகுதியின் மழை நீர் குளத்திற்குள் வர துவங்கியது. தற்போது குளத்தில் முழங்கால் அளவில் காணப்படும் தண்ணீரில் அதிரையர்கள் தினமும் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர்.
குளத்திற்கு நீரை கொண்டுவர இரண்டு வழிமுறைகள் இருந்தும், அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும், பாரபட்சமில்லாமல் இதற்கான முயற்சியில் இவர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.