.

Pages

Tuesday, June 2, 2015

கண் பார்த்தது, மூளை முயன்றது, பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.


மேலத்தெருவில் இருந்து சானவயல் போகும் திருப்பத்தில் முதலாவது மின் கம்பத்தில் ஒரு டியூப் லைட் உடைந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருந்த காட்சியை என் கண்கள் பார்த்து விட்டது.




இது எந்த நேரத்திலும் கீழே விழலாம், பெரிய விபத்து ஏற்படலாம், தெருவில் சிறார்கள் விளையாடுவார்கள், பொது மக்கள் இவ்வழியே கடந்து போவார்கள். உடைந்த ட்யூப் லைட்டை உடனே அப்புறப் படுத்தியே ஆக வேண்டும். மேலும் அப்பகுதி இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருண்டு கிடந்தது.

முயற்ச்சியில் இறங்கினேன், சம்பத்தப் பட்டோரை தொடர்பு கொண்டேன், உடைந்த டியூப் லைட் அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது அவ்விடம் பெரிய விபத்திலிருந்து தப்பியது, இரவில் வெளிச்சம் இருக்கின்றது.



மேலும் அந்த மின்கம்பம் நடப்பட்டு பலவருடங்கள் ஆகி இருக்கும் என்று நினைக்கின்றேன், மின் கம்பத்தின் நடுப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது, இது விஷயமாக மின்வாரியத்தை அணுகி தனிப்பட்ட முறையில் புகார் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் மின்வாரியம் அவ்வளவு சீக்கிரத்தில் அசைய மாட்டார்கள், இன்ஷா அல்லாஹ் அசைய வைப்பேன் இது உறுதி.



உடன் உதவிய அதிரை பேரூர் நிர்வாக தெரு விளக்குகள் கண்காணிப்பாளர், சகோதரர் ஞான செல்வம் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டை அப்பகுதி மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.


புகைப்படம்.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்

5 comments:

  1. முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் உங்கள் உறுதியில் இன்ஷாஅல்லாஹ் என்ற வார்த்தையை சேர்த்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னதும் "இன்ஷா அல்லாஹ்" என்ற வார்த்தையை நேற்று காலை நேரமே சேர்த்து விட்டேன்.(02/06/2015 At 8.52AM)

      Delete
  2. முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் உங்கள் உறுதியில் இன்ஷாஅல்லாஹ் என்ற வார்த்தையை சேர்த்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இந்த ஆக்கத்தை முழுமையாக படிக்கவில்லை என்று நினைக்கின்றேன், காரணம் நேற்றே அந்த "இன்ஷா அல்லாஹ்" என்ற வார்த்தையை சேர்த்து விட்டேன்.

      Delete
  3. மேலும் அந்த மின்கம்பம் நடப்பட்டு பலவருடங்கள் ஆகி இருக்கும் என்று நினைக்கின்றேன், மின் கம்பத்தின் நடுப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது, இது விஷயமாக மின்வாரியத்தை அணுகி தனிப்பட்ட முறையில் புகார் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் மின்வாரியம் அவ்வளவு சீக்கிரத்தில் அசைய மாட்டார்கள், "இன்ஷா அல்லாஹ்" அசைய வைப்பேன் இது உறுதி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.