.

Pages

Tuesday, June 9, 2015

வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி சலுகை !

இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் வரும் 31-03-2016 வரை 23 கிலோ பொருட்களை கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கொண்டு செல்லலாம் என இன்று வெளியாகியுள்ள பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் இந்திய மாணவ-மாணவியருக்கு இந்த சிறப்பு சலுகை பொருந்தும் என இந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர்வரை, ‘செக்-இன் லக்கேல்’ ஆக வெறும் 23 கிலோ பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.