.

Pages

Tuesday, June 2, 2015

ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து மருத்துவர்கள் சாதனை!

ஆப்பிரிக்கா நாட்டில் ஏழ்மையான ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகள் பிறந்த பின்பு ஒட்டியே இருந்தது.

சுமார் 4 மாதங்களாக இவ்வாறு இருந்த குழந்தைகளை பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பாரீஸில் மருத்துவர்களின் முயற்சியால் வெற்றிகரமாக பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டிப் பிறந்திருந்த இந்த குழந்தைகளை பாரீஸ் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ குழு மேற்கொண்ட பரிசோதனையில், இரண்டு குழந்தைகளின் வயிற்று பகுதிகள் ஒட்டி இருந்ததுடன், இருவரின் கல்லீரலும் குடலும் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருந்ததை கண்டுபிடித்தனர்.

உள் உறுப்புகள் இணைந்திருந்து அவற்றை பாதுகாப்பாக பிரிப்பது என்பது மருத்துவதுறையில் அரிதாக நிகழும் அறுவை சிகிச்சை என்பதால், மருத்துவர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு அறுவை சிகிச்சைக்கு தயார் ஆனார்கள்.

கடந்த வாரம் மருத்துவமனையில் மிகவும் ரகசியமாக சுமார் ஒன்பதரை மணி நேரங்கள் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக பிரித்து சாதனை படைத்தனர்.

தற்போது குழந்தைகள் நலமாக உள்ளதாகவும் அடுத்த வாரங்களில் கின்னியாவிற்கு குழந்தைகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.